நிழல் அரசும்! தமிழ் தேசியமும்!


நிழல் அரசில் தேசியம் அவசியமா?


தற்போது சர்வ தேசிய வல்லாதிக்கம் தன் செயல் பாடுகளை நேரடியாக காட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில் இனி நாம் தேசம், தேசியம் குறித்து சிந்திப்பது சாத்தியமா? அவசியமா? என்றெல்லாம் சிலர் பேச துவங்கியுள்ளனர். 

 

வல்லாதிக்கம், ஏகபோகம் செலுத்தும் இவ்வேளையில் நாம் பேசும் தேசியம் என்ன தீர்வை தந்து விடப் போகிறது. தமிழர்களை ஒரு தமிழன் ஆட்சி செய்ய வந்துவிடுவானாகில், தமிழர்களை ஏகபோகத்திடமிருந்து விடுவித்து விட முடியுமா!

 

திராவிட கட்சிகள் அன்றி தமிழனுக்கான கட்சி என்று தன்னை அறிவித்து கொள்ளும் கட்சியானது ஆட்சிக்கு வந்து விட்டால் நிழல் அரசிடமிருந்து, தமிழர்களை மீட்டு விடுமா? என்றெல்லாம் கேட்கிறார்கள்.

 

ஒரு ஊரில் வணிக பெருமுதலாளி ஒருவன் இருக்க, அங்குள்ள சிறு முதலாளிகள் எல்லோரும் அவனுக்கு கட்டுப்பட்டு நடக்க, அந்த சிறு முதலாளிகளிடம் கொத்தடிமை கூலி தொழிலாளியாக இருக்கின்ற ஒருவர், என்னை விட்டு விடுங்கள் நானாக சென்று பிழைத்து கொள்கிறேன், என்று சொல்ல, அவர் அவனை விட்டு விட மறுப்பார் ஆகில் அந்த விடயத்தில் உங்களின் தீர்வு என்னவாக இருக்கும்?

 

ஐயா, நீங்கள் கொத்தடிமையாக இருக்கின்ற உங்கள் முதலாளியே பெரு முதலாளியிடம் அடிமையாய் இருக்கும் போது, அவரிடமிருந்து நீங்கள் வெளியே போய் என்ன சுதந்திரத்தை அடைந்து விட போகிறீர்கள்.

 

உங்களையும் அந்த பெரு முதலாளி கட்டுப்படுத்த தானே போகிறான். அந்த பெரு முதலாளியை எதிர்க்க உங்களுக்கு திராணி இருக்கிறதா! பேசாமல் அடிமைக்கு அடிமையாய் இருந்து விட்டு போங்களேன் என்று கூறுவீர்களா! அப்படி கூறினால், அது நியாயமா!

 

அதற்கு அந்த கொத்தடிமையோ, ஐயா, எந்த பெரு முதலாளியின் தயவில் நான் என் முதலாளியால் அடிமை கொள்ளபட்டிருக்கின்றேனோ, அந்த பெரு முதலாளியின் தயவிலோ அல்லது எனது தனித்த விடுதலை போராட்டத்தினாலோ முதலில் சுதந்திரம் பெறுவது எனக்கு அவசியம்.

 

அதன் பின் நான் சுய சார்பு வாழ்க்கை வாழ போகிறேனா? அல்லது அந்த பெரு முதலாளிக்கு சேவை செய்யும் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருப்பேனா? என்பதை என் வாழ்வியல் சூழலை பொறுத்து நான் முடிவெடுப்பேன் என்று அந்த கொத்தடிமை கூறுவானாகில், அது தவறு! நீ இப்படியே அடிமைக்கு அடிமையாய் வாழ்ந்து மடிந்துவிடு!

 

உன் முதலாளியையும் சேர்த்து அடிமை கொள்ளும், பெரு முதலாளி தான் உனக்கு முதல் எதிரி! உனக்கு உன் முதலாளி நல்ல வாழ்க்கை தராவிட்டாலும், உன் வாழ்க்கையை சிதைத்து சீரழித்து இருந்தாலும், உனக்கு எதிரி, உனக்கும், உன் முதலாளிக்கும் பின்னால் இருக்கும் நிழல் முதலாளியான பெரு முதலாளி தானே அன்றி உன் முதலாளி அல்ல என்று கூறுவது சரியானதாக இருக்குமா!

 

இப்படித் தானே வெள்ளையனை வெளியேற்ற இந்திய முதலாளிகள் எங்களை சுதந்திர போராட்டமென்னும் மாய வலையில் சிக்க வைத்து, இன்று எங்களை வெள்ளையனே பரவாயில்லை என்று சொல்லுமளவிற்கு, எங்கள் சுதந்திரத்தை, எங்கள் உரிமையை பறித்து எங்கள் இயற்கையின் வளமையை, எங்கள் தேசத்தின் எல்லையை இழந்து, எங்கள் சகோதரர்களின் உயிரை இழந்து, எங்கள் சகோதரர்களை அண்டை மாநிலங்களில் எல்லை பிரிவினையால் சிறுபான்மையினர்களாக்கி ஏதிலிகளாக வாழ்ந்து வருகிறோம்.

 

எங்கள் வாழ்க்கையை பெரு முதலாளியுடன் கூட்டு சேர்ந்து சிதைத்து, சீரழிக்கும் தேசிய முதலாளிகளின் நலனுக்காகவே பாடுபட்டு நாங்கள் அழிந்து போக, இவர்கள் கூறும் போலி ஜனநாயகத்தின், போலி சுய சார்பை உண்மையென எத்தனை காலம் தான் நம்பி ஏமாறுவது என சிந்திக்க வேண்டியுள்ளது அல்லவா!

 

நிழல் அரசு என்பது ஆண்டான், அடிமை சமுதாயத்திலேயே உருவாகி விட்டது, எனபதை நாம் உணர வேண்டும்.

 

பல நாடுகளை தன் படை பலத்தால் வென்று விடும் அரசன், அதை பரிபாலனம் செய்யும் வேலையை தன் பிரதிநிதிகளை கொண்டு ஆண்டான். அவன் தன்னை பேரரசன் என கூறி கொண்டான். உலகமும் அவனை பேரரசன் என்றே போற்றியது.

 

பல சிற்றரசர்கள், மற்றும் குருநில மன்னர்கள், அவர்கள் ஆண்டு வந்த பகுதிகளுக்கு, பேரரசனுக்கு திரை செலுத்தியே வாழ்ந்தனர். அப்பொழுது பேரரசன் தானே நிழல் அரசு!

 

அப்பொழுதெல்லாம் சிற்றரசர்களும், குருநில மன்னர்களும், அவர்களின் தேசம், தேசிய இனம், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, ஆன்மீகம் போன்றவற்றை கட்டிக் காத்து வளர்த்தெடுக்கவில்லையா!

 

இங்கே ஆள்பவன் என் இனத்தை சேர்ந்தவன் என்பது மட்டும் முக்கியமல்ல. என் இனத்தின் தேசம், தேசிய இனம், அதன் அரசியல், பொருளியல், எல்லை, கலை இலக்கியம், பண்பாட்டின் மீது அக்கறை கொண்டவனும், பற்று கொண்டவனுமே தலைவனாக வர வேண்டும்.

 

அப்படிபட்ட தலைவனை உருவாக்கும் சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டுமானால், தமிழனுக்கு தேசிய இன உணர்வும், மொழி பற்றும் மிக மிக அவசியமானதாகும். அதை பயிற்றுவிக்க பாடுபட வேண்டியது, புரிதல் உள்ள ஒவ்வொரு தனி தமிழனின் கடமையாகும்.

 

அதுவே நம் வருங்கால சந்ததியை விழித்தெழ வைக்கும். இல்லை எனில், நம் வருங்கால சந்ததிக்கு துரோகம் இழைத்தவர்களாகிறோம்.

 

உலகம் முழுவதும் கட்டி ஆண்ட வெள்ளையன் அரசுக்கு என்ன பெயர்? தி கிரேட் பிரிட்டன் என்பது தானே. தி கிரேட் பிரிட்டன் என்றால் பேரரசு என்று தானே அர்த்தம்.

 

பேரரசின் வடிவம் தானே மாறி இருக்கிறது. அது நாகரீகம், அறிவியல் வளர்ச்சியை பொறுத்து வடிவ மாற்றம் பெறுகிறது. ஆண்டான் அடிமை முதல் இன்று ஏகாதிபத்தியம் வரை நிழல் அரசுகளின் மேலாதிக்கம் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.

 

ஃப்ரீமேசன் (freemason) மூலம் உலகம் முழுவதையும் கட்டுப்படுத்தும் பதிமூன்று யூத அரச குடும்பங்களின் தலைமை பிரதிநிதியாக கிரேட் பிரிட்டன் இருக்க, எதிரும் புதிருமாக வல்லரசுகளின் போட்டி நடக்கிறது.

 

அந்த வல்லரசுகளுக்கு வளரும் நாடுகள் சேவை செய்ய, மக்களையோ, இன மோதல், நிற மோதல், மத மோதல், குல(சாதி) மோதல் என்றும், ஏகாதிபத்தியம் கூறும் பெண்ணியம், கலாச்சார சீரழிவு, குடும்ப முறையை தகர்த்தல், சிதைத்தல் போன்றவற்றையும் யுத்தத்தாலும், நோயை பரப்புவதன் மூலமும் மக்களை துன்புறுத்துவதும், அன்றாட நிகழ்வாக உள்ளது. இந்த கொரோனாவால் வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில் தான் மக்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர்.

 

நாடு நூறு ஆண்டுகள் பொருளாதார பின்னடைவை சந்தித்து விட்டதாக ரிசர்வ் வங்கி கவர்னர் கூறுகிறார். பிரதமரோ நாடு கொரோனா யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டதாகவும், பொருளாதாரத்தில் மேம்பட்டு விட்டதாகவும் பெருமைபட்டு கொள்கிறார்.

 

இந்நிலையில் நிழல் அரசுகளின் தயவில் நம் அரசுகள் செயல்படுகிறது என்பதற்காக நம் நியாயமான உரிமைகளை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. உரிமைகளை பெற போராடிதான் ஆகவேண்டும். போராட்டம் வீணாக போகாமல் இருக்க மக்கள் இன உணர்வு கொண்டாக வேண்டும்.

 

அனைத்து அண்டை இனங்களுக்கும், சேர்த்து போராட இயலாது, ஏனெனில் இனங்களுக்குள் பகை வளர்க்கபட்டு விட்டதால், அனைத்து இனங்களுக்குமான ஓர்மையும், வளர் நிலையும், முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.

 

அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், அளவிற்கு இந்த தமிழ் மண்ணில் தேசிய இன உணர்வும் இல்லை. மொழிபற்றும் இல்லை.

 

உலக தமிழர்கள் அனைவருக்கும் இந்த தமிழ்நாடு தான் தாய் மண்ணாகும், இங்கிருந்தே மனித குல நாகரீகம் உலகம் முழுவதும் எடுத்து செல்லப்பட்டிருப்பினும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, அடிமை பட்டதால், சுய மரியாதையை இழந்தவனாகவும், தன் அடையாளத்தை மறந்தவனாகவும், திராவிடம், இந்து என்ற பொய்யான அடையாளத்தில் முகம் பதித்து வாழ்கிறான். அதில் இருந்து தமிழனை வெளி கொண்டு வர வேண்டியது நமது கடமையாகும்.

 

உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வேலையை சர்வ தேச முதலாளிகள் செய்வார்கள். அதுவரை நம் தேசிய இனத்தை ஒன்றிணைக்கும் வேலையை நாம் செய்வோம்.

 

உலக தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள் என்று மார்க்ஸ் கூறினார். ஆனால் உலக முதலாளிகள் சுரண்டலுக்காக ஒன்று சேர்ந்துள்ளனர்.

 

இவர்களே உலக மக்கள் அனைவரையும் ஓர் நாள் ஒன்று சேர்த்து விடுவார்கள். அதுவரை நமக்கு, நம் தேசியம் அவசியமே! அடிமைக்கு அடிமையாய் வாழும் நிலையிலும், நிழல் அரசானாலும் நமக்கு தேசியம் அவசியமே!

 

-தமிழ் தமிழன் (தமிழர் வரலாற்று கழகம் )

சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை. 

இஸ்லாமும் இந்துத்துவமும் !


டிக் டாக்




இஸ்லாமும் இந்துத்துவமும் !

 

எந்த ஒரு சமூக மாற்றமும் அச்சமூகத்தின் மீது ஆட்கொண்டிருக்கும் அதிகார அரசியல், பொருளியல், பண்பாட்டியலை மையம் கொண்டே முன்னேறி செல்கிறது.

 

மாற்றம் ஒன்றே மாறாதது என்கின்ற இயங்கியல் கோட்ப்பாட்டை ஏற்க மறுக்கும் மதவியலானது, முடிந்தவரை ஆளும் வர்க்க நலனுக்கேற்ப மத பிற்போக்கு பண்பாட்டு இறுக்கத்தை, தளர்த்திக்கொண்டு மக்களோடு பயணிப்பதிலும், மத அடிப்படைவாதம், முன்னேறிச்செல்லும் சமூகத்தை பின்னோக்கி இழுப்பதையே முதன்மையாக கொண்டுள்ளது.

 

உலக அளவில் மத அடிப்படைவாதத்தை நிறுவுவதில் இஸ்லாம் முன்னணியில் இருக்கிறது. உலக வரலாற்றில் நிலவியலோ, புவியியலோ, அரசியலோ, அரசுகளோ அது சார்ந்த பொருளியலோ, பண்பாட்டியலோ தொடர்ந்து மாற்றம் கண்டு முன்னேறி வந்திருக்கும் வேலையில், மாறாது, மாறக்கூடாது என்பது கற்பனையான அதிகாரமல்லவா ! அந்த வளர் நிலையில் இடையில் தோன்றியது தானே இஸ்லாம் ! அப்படி இருக்கும் பொழுது அதையும் (இஸ்லாத்தை)  தாண்டி சமூகம் முன்னேறுவது தவிர்க்க முடியாதது தானே ! சமூக மாற்றத்தை மதத்தின் பெயரால் தாமதப் படுத்த முயற்சிக்கலாமே தவிர, தடுத்துவிட இயலாது !

 

ஏக போகத்தின் நுகர்வு கலாச்சாரம் உலகில் எந்த ஒரு இஸ்லாமிய குடும்பத்தையும் பாதிக்காமல் இல்லை ! அதற்காக அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளையும், அதன் பயன்களையும், அதனால் ஏற்படுகின்ற மகிழ்ச்சியையும், வாழ்வியலையும், அதற்கான அவர்களின் பொருளீட்டல்களையும் முற்றாக புறந்தள்ளி இஸ்லாம் மதத்தை காப்பாற்றும் துணிச்சல் இருக்கிறதா ! இருக்க முடியுமா !

 

வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்பு, கைநிறைய சம்பாத்தியம் நல்ல சாப்பாடு வீட்டில் பெண்பிள்ளைகளுக்கும் உயர் ரக கல்வி, உடன் படிக்கும் பிள்ளைகள் செய்யும் ஆசைகள் அபிலாசைகள் எல்லாம் இஸ்லாம் ஆன்பிள்ளைகள் போல் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் இல்லாமல் போவதற்கு அவர்கள் என்ன கல் சிலையா ! அனைத்து உணர்ச்சிகளும் உள்ள உயிருள்ள மனிதப்பிறவிகள் தானே !

 

ஆணோ, பெண்ணோ அவர்களின் தனிப்பட்ட உரிமைகளில், உணர்வுகளில், மதம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு அதில் தலையிடுவது குற்றமல்லவா !

 

குரானில் இருந்து ஆதாரத்தை காட்டும் இஸ்லாமியர்களே ! நீங்கள் உங்கள் வாழ்வில் அனைத்தையும் குரான் வழி கொண்டுதான் வாழ்கிறீர்களா ! அனைத்தையும் கடைவிரித்தால் ஆயிரம் பக்கங்கள் போதாது ! டிக் டாக்கில் வரும் இஸ்லாமிய பெண்களை விட அடிமைபெண்கள் மேலானவர்கள் என்று குரானில் ஆதாரம் காட்டுகிறீர்கள், குரானுக்கு மாறு செய்யும் உங்கள் வாழ்வியலை விவரித்தால் என்னவாகும் !

 

வரதட்சணையால், முத்தலாக்கினால், குல வேறு பாட்டால், இன வேற்றுமையால், ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம் என்ற வேறு பட்ட பார்வையால், ஒழுக்கக்கேட்டால், தமிழ் இனத்தின் மீதும், மொழியின் மீதும் நீங்கள் காட்டும் இழிந்த செயல்பாட்டால், அரபு மொழியின் அடிமைகளானதன் விளைவால் குரானுக்கு எவ்வாறு மாறு செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

கிறிஸ்துவ மதம் கி.பி.3-ஆம் நூற்றாண்டில் ரோமாபுரியில் இருந்து ஐரோப்பாவில் பரவத் துவங்கியது அப்பொழுதெல்லாம் இலத்தின் மொழியே மறை மொழியாகவும், கோவில் வழிபாட்டு மொழியாகவும் இருந்தது. இருப்பினும் கி.பி.16-ம் நூற்றாண்டில் மார்ட்டின் லூத்தர் என்னும் ஜெர்மானியர் போப்பாண்டவர் அதிகாரத்தை எதிர்த்து செய்த மாபெரும் கிளர்ச்சியால் சீர்திருத்த கிறித்துவ மதம் தோன்றிற்று ! அதன் பின் அனைத்து கிறித்துவர் கட்டமைப்புகளும் அந்தந்த தேசிய மொழிகளிலேயே வழிபாடு நடத்த அனுமதி அளித்து இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துவர்கள் தங்களின் உணர்வுகளின் உயிரின் மொழியான தாய் மொழியில் தன்னை படைத்த தந்தையும் தாயுமாய் இருக்கின்ற இறைவனை துதித்து போற்றி வணங்கி வருகின்றனர்.

 

ஆனால் அரபி மதமும், பிராமணார்களின் மதமும் இயற்கை மத நம்பிக்கைகளை திருடி தனதாக்கிக்கொண்டு, வல்லாண்மைக்கு மல்லுக் கட்டிக் கொண்டு இருக்கின்றன.

 

யூத மற்றும் கிறித்துவ மத வழித்தோன்றல்களையும், அதன் இலக்கியங்களையும், வேதங்களயும், அதன் நபிமார்களையும் தனதாக்கிக்கொண்ட மதம் இஸ்லாம் !

 

தமிழர்களின் முன்னோர்களையும் இறைவனையும், தமிழர்களின் தத்துவங்களையும், ஆகமங்களையும், சிவனியத்தையும், மாலியத்தையும் திருடியும் திரித்தும் தனதாக்கிக்கொண்ட மதம் வைதீக மதத்தின் மிருக மதம் இந்துத்துவம் !

 

இருவரும் இறைவழிபாட்டை அந்தந்த தேசிய மொழிகளில் வழிபாடு நடத்துவதில்லை. அதாவது நாடு தமிழ் நாடு, ஆலயம், பள்ளிவாசல் இருக்கும் இடம் தமிழனின் மண்ணில், கட்டப்பட்ட கட்டிடத்துக்கு பணம் கொடுத்தவன் தமிழன், இடம் கொடுத்தவன் தமிழன், வழிபட, தொழுது கொள்ள வருபவன் தமிழன் ஆனால் பிராமணன் தமிழில் ஓதமாட்டான் ! ஹஜரத் தமிழில் தொழுகை நடத்த மாட்டான் !

 

வழிபாட்டுக்கு செல்லும் தமிழன் புரியாத மூக்கொலியில் ஓதப்படும் வினோதமான சத்தத்தை மந்திரம் என நம்பி இறைவனுக்கு தன்னை ஒப்படைத்து விட்டோம் எனக்கருதி ஆலயத்தை, பள்ளிவாசலை விட்டு வெளியேறும்படி மக்களை செய்வது எவ்வளவு தீங்கானது ! ஆலயத்திற்கும், பள்ளிவாசலுக்கும் சென்று வழிபட்டு திரும்பும் தமிழனுக்கு இவனுக என்ன சொல்லி வழிபட்டானுக என்று எவனுக்கும் தெரியாது !

 

இந்த இரு மதங்களுக்கும் உள்ள வேற்றுமை என்ன வென்றால் இஸ்லாம் சர்வ தேச மதம் ஆனால் சர்வதேசத்தை ஆளும் அதிகாரமற்ற மதம் ! இந்து மதம் இந்தியாவில் மட்டும் உள்ள மதம் ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவை அதிகாரம் செய்யும் வல்லமை பெற்ற மதம் !

 

இஸ்லாத்திற்கு குறைந்தபட்ச அதிகாரம் என்றால் மக்களை அரபி மொழியில் தொழ வைப்பது முடிந்த வரை மண்ணின் இன பண்பாட்டை ஒழித்து அரபு பண்பாட்டை பின்பற்றும் படி தனித்த மதச்சட்டங்களை கொண்டு அதிகாரமற்று மதவியலாய் ஆண்டு வருவது !

 

இந்து மதம் அதிகாரமுள்ள மதமாதலால் பல தேசிய இனங்களை ஒரு குடையின் கீழ் ஆள பல மொழிகள் இருப்பது இந்திய ஆளும் வர்க்கத்துக்கு இடையூராய் இருப்பதால் ஒருங்கிணைந்த இந்தியா என்ற நாட்டை ஒரே இந்தியாவாக மாற்ற ஒரு பொது மொழி தேவைப்படுவதால் பாடசாலைகளில் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக பயிற்றுவித்தால் நலம் என்கின்றது. ஒரு காலத்தில் வேதத்தை பிராமணனைத் தவிர எவரும் படிக்கக்கூடாது என்பது மதச்சட்டம் ! இன்று எல்லோரும் சமஸ்கிருதம் பயின்றுவிட்டால் எல்லோரும் வேதம் படித்துக்கொள்ளலாம் ! இறைவன் முன் நடை பெறும் வழிபாட்டையும் அறிந்து கொள்ளலாம். ஆனால் வேத பூசாரியாக முடியாது !

 

இஸ்லாமோ அரபி தெரிந்தால் நீங்கள் தொழுகையை முன்னின்று நடத்த முடியும், எனவே எல்லோரும் அரபி படியுங்கள் இல்லையேல் அர்த்தம் புரியாவிட்டாலும் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள் அது போதும் என்கிறது !

 

இஸ்லாத்தில் சாதியே இல்லை என்பார்கள் ஆனால் சாதியும் தீண்டாமையும் இஸ்லாத்திலும் உண்டு திருக்குரான் சாதி பிரிவினையை ஏற்று கொள்கிறது ஆனால் தீண்டாமையை ஏற்க வில்லை.

 

இஸ்லாம் தாய் மொழி வழி தொழுகையை கூடாது என்று எவ்விடத்திலும் சொல்லவில்லை அப்படி சொல்வதற்கான அவசியம் அம்மார்க்கம் கட்டமைக்கப்படும் பொழுது அது பற்றி விவாதம் தேவைப்படவில்லை.

 

இறைவன் திருகுரானில் ஓர் இடத்தில் யூதர்களின் மொழியாகிய ஹீபுரு மொழியில் தன்னை அழைக்கவில்லை என வருந்துகிறான் ! “அரபு மொழியில் ராயினா என்றால் எங்களை கவனியுங்கள் என்று அர்த்தம் அது யூத மொழியில் முட்டாளே (மூடனே) என்று அர்த்தம். யூதர்கள், அவர்கள் மொழியில் மொழி பெயர்த்து உள்ளூர்னா (எங்களை அன்பாக நோக்குங்கள்) என்று அழைக்காமல் அரபியிலேயே அழைத்து கேடு செய்கிறார்கள் என அல்லாஹ் வருந்துகிறான்”- திருக்குரான் அத்தியாயம் 4:46

 

இவர்களின் தொழுகைகள் நிச்சயம் உலகில் உள்ள மாற்று மொழிகளில் அது வேறு அர்த்தம் தருவதாக அமைந்திருக்கும் அது அல்லாஹ்வை வருத்தத்திற்கு உள்ளாக்காதா ! சர்வ தேச மேட்டுமை தனத்தால் தானே அரபு மொழி வழி தொழுகையை திணித்து வருகிறார்கள் !

 

உலகில் பல ஆயிரம் தேசிய இனங்களையும் அவர்களுக்கான தொடர்பு மொழியையும் இறைவன் வழங்கி இருக்கிறான். ஒரு மொழியில் உள்ள ஒரு சொல் வேறு மொழியில் வேறு அர்த்தம் தருவதாக இறைவன் அமைத்து இருக்கிறான். ஆக ஒவ்வொரு தேசிய இனமும் தன் தன் மொழிகளில் வழிபாடு செய்வதே இறைவனை திருப்திப் படுத்துகிறது. வேற்று மொழியில் வழிபாட்டை உச்சரிக்கும் பொழுது அதன் அர்த்தம் இறைவனை அவமானப்படுத்துவதாகவோ கேவலப்படுத்துவதாகவோ அமைந்து விடும் பொழுது எல்லாம் வல்ல இறைவன் நம் மீது எவ்வாறு கருணை மழை பொழிவான் ! மதத்தை உருவாக்கியவனுக்கு வேண்டுமானால், அவன் மொழி உயர்வாக தெரியலாம் ஆனால் இறைவன் படைப்பில் எவனும், எதுவும் உயர்வு இல்லை இறைவனே உயர்ந்தவன் அல்லவா !

 

“உங்களுடைய மொழிகளும், உங்களுடைய நிறங்களும் வேறு பட்டிருப்பதும் அவனுடைய அத்தாச்சிகளில் உள்ளவையாகும்”- திருக்குரான் அத்தியாயம் 30:22

 

“நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் (ஆதலால் உங்களில் ஒருவர் மற்றவரை விட மேல் என்று பெருமை பாராட்டிக்கொள்வதற்கில்லை)”- திருக்குரான் அத்தியாயம் 49:13.

 

ஆக, பல்வேறு மொழிகளும், இனங்களும், அதனுள் உள்ள கிளைகளும், கோத்திரங்களும் இறைவன் மனித குலத்தை பகுதி, பகுதியாக பிரித்து அறிவதற்காகத் தான் உருவாக்கினானே தவிர, ஓர் இனம் உயர்ந்தது என்ற மேட்டுமை தனத்தை காட்டுவதற்காக அல்ல என்பது புலனாகிறது அல்லவா !

 

நபிகளார் அவர்கள் தொழுகையில் என்னை பின் தொடருங்கள் என்று சொன்னால் அவர் மொழியை பின்பற்றுங்கள் என்பதல்ல ! நபி வழியை பின்பற்ற வேண்டுமே அன்றி நபி மொழியை அல்ல !

 

இந்திய முஸ்லிம்களை அரபி முஸ்லிம்கள் கேவலமாகத்தான் பார்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

அரேபியர்களின் வழித்தோன்றல்கள் என கூறிக்கொள்ளும் வந்தேறி உயர் சாதி இஸ்லாமியர்கள் இங்கே தமிழர்களோடு கலப்பதில்லை இங்குள்ள இஸ்லாமிய தலைமையை கையில் வைத்துக்கொண்டு தமிழ் முஸ்லிம்களை ஏதிலிகலாக வைத்திருக்கிறார்கள். ஆரிய, திராவிட இயக்கங்களோடு கை கோர்த்துக்கொண்டு தமிழ் மொழி, இனத்திற்கு ஊறு விளைவிப்பவர்களாகவே உள்ளனர். இங்கே சாதியும், தீண்டாமையும் இஸ்லாமியர்களுக்குள் பரவிக்கிடக்கிறது.

 

இந்த தலைமையை கையில் வைத்திருக்கும் வந்தேரி இஸ்லாமியர்கள் இந்தியை தமிழனின் மீது திணிப்பதை ஆதரிப்பார்கள். அரபியும் இந்தியும் கலந்த உருது, இந்திக்கு நெருக்கமாதலால் வட இந்திய தலைமைக்கு விசுவாசமாக இந்தியை வழிந்து ஆதரிப்பார்கள். தமிழ் முஸ்லிம்கள் சிறிதும் சுய அறிவு, தன்மானம் இன்றி ஆட்டு மந்தைகள் போல் வந்தேரி இஸ்லாமியர்களுக்கு மதத்தின் பெயரால் விசுவாசமாக வாழ்ந்து வருகிறார்கள்.

 

சமூக மாற்றம் தவிர்க இயலாதது. அரபு நாடுகளில் பெண்கள் வேலைக்குச்செல்வதும், கார் போன்ற வாகனங்களை இயக்குவதும் சமூக வலைய தளங்களை பயன் படுத்துவதும் சாதாரணமாகி விட்டது ! அரபு நாட்டு பெண்களின் டிக் டாக்கை பார்த்தால் அதிர்ந்து போவீர்கள் ! நம் தமிழ் நாட்டு இஸ்லாமிய பெண்கள் எவ்வளவோ மேல் !

 

இனி இந்து என முகவரி கொடுக்கப்பட்ட தமிழர்களானாலும், இஸ்லாமிய தமிழர்களானாலும் உங்களின் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்குங்கள் !

 

இந்துத் தமிழர்கள் ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கூறுங்கள். தமிழில் அர்ச்சனை செய்ய மறுக்கும் பிராமணனை புறக்கணியுங்கள் !

 

தமிழ் இஸ்லாமியர்கள் தமிழில் தொழுகையை நடத்த முயற்சி செய்யுங்கள். தமிழ் வழி தொழுகை பள்ளியை உருவாக்குங்கள்.

 

ஆலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் நம் தாய் மொழியாகிய தமிழ் மொழியில் பிரார்த்தனைகளும், தொழுகைகளும் நடந்து எல்லாம் வல்ல ஏக இறைவனை மாற்று மொழியில் தொழுது கேவலப்படுத்தாமல், நம் உணர்வுப்பூர்வமாக, உள்ளத்தின் நெகிழ்ச்சியோடு உளவியலாய் இறைவனோடு இரண்டற கலந்து துதிக்கும் இறை வணக்கமே இறைவன் முன் மிக மிக மேலானது !

 

நம் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தாய் மொழியில் இறைவனை துதித்துத் தான் பல மேலான பக்தி இலக்கியங்களை நமக்கு தந்தார்கள்.

 

நாமும் நம் முன்னோர்களின் வழி நின்று இறைவனை தாய் மொழி வழியாக துதித்து பேரின்ப வாழ்வு வாழ இந்த ஆரிய, திராவிட கருத்தியல் தடையாய் இருந்து வருவதினாலும், நம்மீதான அதிகாரமும் அவர்கள் வசம் இருப்பதால், அதை மாற்றி அமைக்க வருங்காலத்திலாவது தமிழன் தனக்கான அதிகாரம் படைக்க, தமிழனை, தமிழனுக்கான ஆட்சியை, தமிழனுக்கான தலைவனை அடையாளம் கண்டு வாழ வாழ்த்துகிறேன்.

 

முத்தலாக் தடை சட்டம் நன்மையா ? தீமையா ? கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் CLICK HERE

 

#TIKTOK #tiktok #Tik_Tok #டிக்_டாக் #டிக்டாக் #இஸ்லாம் #இந்துத்துவம் #பெண்கள்  #தலாக் #முத்தலாக் #talaq #சாதி #தீண்டாமை #தொழுகை #திருக்குரான்

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

தமிழர்களுக்கு தேசிய இன உணர்வு வேண்டும் ! ஏன் ?!


தமிழர்களுக்கு தேசிய இன உணர்வு வேண்டும் ! ஏன் ?!

 


உலகில் எங்குமே தமிழகத்தை தவிர சிறுபான்மை தேசிய இனம் பெரும்பான்மை தேசிய இனத்தை ஆண்டதில்லை ! ஆள்வதுமில்லை !! நம் அண்டை மாநிலங்களில் மாநில கட்சிகளை விட அகில இந்திய கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சினாலும், அவர்கள் தேசிய இனவாதிகளாக இருந்து கொண்டு, அகில இந்திய கட்சியின் பெயரை முகவரியாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

 

அந்த மாநிலங்களில் தேசிய இனத்திற்கு ஆட்சியாளர்கள் ஊறு விளைவிப்பதாக மக்கள் உணர்வார்களேயானால் அடுத்த தேர்தலில் அவர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடுவார்கள். இதனால் போட்டி போட்டுக் கொண்டு அங்குள்ள அகில இந்திய கட்சிகளே அந்த தேசிய இனத்திற்கான உரிமைகளை விட்டு கொடுப்பதில்லை. அகில இந்திய தலைமைக்கு கட்டுப்படுவதும் இல்லை. அகில இந்திய கட்சியின் கொள்கைகளை மதிப்பதும் இல்லை. அகில இந்திய கட்சி தலைவர்கள் தமிழகத்தில் பேசும் பேச்சு ஒரு விதமாகவும், நம் அண்டை மாநிலங்களில் பேசும் பேச்சு வேறு விதமாகவும் இருப்பதை காண்கிறோம். அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட ஏற்பதும் இல்லை ! மதிப்பதும் இல்லை !!.

 

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை காவு கொண்டது போல் இந்திய அரசு தலைமையில் கன்னடர்களோ, மலையாளிகளோ, வடுகர்களோ படுகொலை செய்யப்பட்டு இருந்தால் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அந்த கட்சிகள் அந்த மண்ணில் இருந்து நிரந்தரமாக அகற்றப்பட்டிருக்கும். அத்துடன் இந்திய கட்டமைப்பே ஆட்டம் கண்டிருக்கும். என்ன துணிச்சல் இருந்தால் அதே கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள். நாமும் புரிதலின்றி பல் இழிக்கிறோம் !

 

சிறுபான்மை தேசிய இன தலைவர்கள் பெரும்பான்மை தேசிய இனத்தவர்களை ஆட்சி புரிவதற்கு உருவாக்கி வைத்திருக்கும் பொய்யான அடையாளம் தான் திராவிடம் !. அதன் தந்தை ஈ.வெ.ரா !!. ஏமாற்றியவன் வடுகன் ! ஏமாந்தவன் தமிழன் !!

 

தேர்தலில் தமிழனின் கட்சிக்கு வாக்களிக்க சொன்னால் ஒரு சிலரோ, ஒரு யோக்கியனையும் காணோம் என்கின்றனர். தமிழ் மாபியாக்களுக்கு எப்படி வாக்களிப்பது என்கின்றனர். ஓட்டு கேட்டு வரும் ஆரியனும், திராவிடனும் அல்லது ஆரிய திராவிட கூட்டணிகளும் மாபியாக்கள் இல்லையா ! மாபியாக்கள் மட்டுமே கோலோச்சும் அரசியல் கட்டமைப்பு தானே நம் நாட்டின் அரசியல் வாழ்நிலை !

 

நில பிரபுத்துவ அதிகாரம் தொழில் மயப்படுத்தப்பட்ட முதலாளித்துவ ஜனநாயக அதிகாரத்திற்கு முறையாக பரிணாமம் பெறும் முன்பே பிரிட்டிசாரின் காலனி ஆகிப்போன நாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை தொடர் அடிமைத்தனத்தை, அடிமைப் பண்பாட்டை பேணி வருகிறோம். நம் அடிமைகளில் இருந்து ஒரு தலைவன் வருவதை நாம் விரும்புவதில்லை. பிரிட்டிசார் கைமாற்றி கொடுத்து விட்டு சென்ற அந்த ஆரிய, திராவிடனுக்குள்ளேயே தலைவனை தேடிக்கொள்கிறோம்.

 

இன்று ஏக போகம் தன் அதிகாரத்தை உலகமயப்படுத்துதல் மூலம் செயலாக்க வந்த பின்பும், நம் வலிமையை நாம் பயன் படுத்துவதை விட்டு விட்டு, சிறுபான்மை தேசிய இன தலைவன்களை முன் நிறுத்தி ஆளுமை ஆற்றல் இன்றி வாழ்ந்து வருகிறோம்.

 

நம் அரசியல், பொருளாதாரம், இசை, பண்பாடு, வாழ்வியல், வர்த்தகம் என அனைத்தையும் ஆரிய திராவிட இனங்களிடம் ஏமாந்து விட்டு விட்டு கடின உழைப்பை மட்டுமே வைத்திருக்கிறோம். அதுவும் வட இந்திய மக்களின் தமிழக குடியேற்றத்தாலும், அரசு வேலையை தமிழனிடமிருந்து பறித்தெடுத்து, வட இந்திய தொழிலாளர்களுக்கு அளிக்கப்படுவதாலும் அந்த உரிமையையும் தமிழன் இழந்து வருகிறான். இனி, தமிழன் நாட்டை விட்டு ஓட வேண்டும் ! இல்லையேல் பட்டினி கிடந்து சாக வெண்டும் !! அல்லது தன்மானம் இழந்து, தகுதியற்ற வேலை செய்து உயிர் வாழ வேண்டும் என்ற நிலையே !!!

 

இனி பெரும்பான்மை தேசிய இனமான தமிழர்களை தமிழனே ஆளவேண்டும் என்ற நிலை வேண்டும். அவன் மாபியாவோ ! மாயாவியோ !! அல்லது மந்திரவாதியோ !!!

 

ஆளும் கட்சியும் தமிழன் கட்சியே ! எதிர் கட்சியும் தமிழன் கட்சியே !! என்ற நிலையை உருவாக்கவேண்டும். மக்கள் இனம், மொழி, பண்பாட்டிற்கு ஊறு நேர்ந்தால் அதை தடுக்க துப்பில்லாதவன் தூக்கி எறியப்பட்டு தமிழுக்காக வாழ்பவனுக்கு மட்டும் தான் தமிழகத்தில் இனி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

 

இனி தமிழகத்தில் தமிழன் தான் ஆளமுடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். தேசிய இன மூலதனம் மீட்டுருவாக்கம் செய்ய்யப்பட வேண்டும். அதன் பிறகு தான் ஆள்பவன் மாபியாவாக இருக்கலாமா அல்லது யோக்கியனை அதிகாரத்தில் அமர்த்தலாமா என்று முடிவு செய்ய முடியும். அரசியல், பொருளாதாரம், இசை, பண்பாடு, வாழ்வியல், வர்த்தகம் என இழந்த அனைத்தும் தமிழனின் உடைமையாக மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

 

அதற்கு தமிழன் தேசிய இன உணர்வு பெற்றாக வேண்டும் ! இல்லையேல் தமிழ் மொழியும் அழியும் ! தமிழ் இனமும் மறைந்து போகும் !!

 

தமிழ் தேசியம் என்பது பாசிசமா ? கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2019/03/blog-post.html

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).