தேசியமா ! ஊழலா !


தேசியமா ! ஊழலா !

 


உலகில் ஊழல் இன்றி எந்த நாடும் இல்லை ! எந்த சமூக படிநிலையும் இல்லை ! மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும்பொழுதெல்லாம், தனக்கெதிராக ஊழல் செய்து உச்சம் தொடுபவர்களை தண்டிக்காமல் விட்டதில்லை.

 

 

இந்நிலையில் ஊழலை ஒழிப்பதற்காகவே கட்சி கட்டுகிறேன் என்கிறார் ஒருவர் ! ஊழலற்ற தமிழ் தேசியம் படைப்பேன் என்றும் ஊழலை தமிழ் தேசியத்தின் வாயிலாக ஒழித்து வடுவதாகவும் ஒரு சிலர் கட்சி கட்டி பேசி வருகிறார்கள் !

 

 

உலகில் ஜனநாயக அமைப்பு வடிவத்தின் உயர்தரமான, உண்மையான, நேர்மையான, ஜனநாயகமான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என சொல்லப்படுகிற மக்கள் ஜனநாயகத்தில் கூட ஊழல் நடந்ததாக, நடப்பதாக அறிகிறோம் ! இந்திய ஜனநாயகம் என்பது வர்க்கங்களுக்கிடையே சமரசம் செய்து கொண்டு, மேட்டுக்குடியினரையும், வருணாசிரம உயர் சாதி கட்டமைப்பிற்கு பங்கம் வராவண்ணம் பாதுகாக்கும் போலி ஜனநாயகமாகும். இங்கு ஊழல் அற்ற ஜனநாயகம் என்பது எத்தர்களின் ஏமாற்று வேலையாகும் !

 

 

தமிழன் பொது நிலையில் வர்க்கமாகவும், தனித்த நிலையில் இன ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறான். தமிழினத்திற்கு மிக அவசிய தேவையானது தனித்த இன ஒடுக்குதலுக்கு மூல காரணமான இந்தியத்தையும், அதன் சார்பு நிலையுடன், கயமை கொள்கையை கொண்ட திராவிடத்தையும் முரண்பட்டு, புறந்தள்ளி, தமிழன் என்ற கருத்தியலாய் உருப்பட்டாலன்றி தமிழினத்திற்கு வாழ்வில்லை !

 

 

எனவே, தமிழினத்திற்கு உடனடி தேவை ! ஊழல் ஒழிப்பல்ல ! தமிழ் தேசியமே !

 

யார் தமிழர் ? கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் ! http://historicalorganisationoftamils.blogspot.com/2018/01/blog-post.html

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக