தமிழ் தேசம் மலருமா ?!

 

தமிழ் தேசம் மலருமா ?!

 


உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழன், தான் வாழும் தேசத்தை தன் சொந்த தேசமாக கருதி, பாரபட்சம் இன்றி உழைத்து வளமாக்கினான், வளமாக்குகிறான். அவன் இந்த புவியின் மூல தேசிய இனமாதலால் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும், அதை தன் தேசமாகவே நேசிக்கிறான் !

 

 

“யாதும் ஊரே ! யாவரும் கேளீர் !!“ என்ற உயரிய நேசப் பண்பு தமிழனிடம் இருந்தே வெளிப்பட்டது !

 

 

“ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் !!” என்பதெல்லாம் தமிழன் மீது ஒட்டிக்கொண்ட ஒட்டுண்ணியான திராவிடவாதிகளின் குரலாகும்.

 

 

இறை நம்பிக்கை, இறை மறுப்பு இவ்விரண்டையும் சாராத மானுடவியலின் தத்துவமாக வெளிப்பட்டது தமிழன் கணியன் பூங்குன்றனாரின் குரல்.

 

 

வரலாற்றில் எம் மூவேந்தர்களும் தமிழக மண்ணை மட்டுமே மாறி, மாறி ஆண்டு வந்தனர். வேங்கடம் தாண்டி வெற்றி பெற்ற போதும், கடல் கடந்து போரிட்டு வெற்றி பெற்ற போதும், வெற்றி பெற்ற பகுதிகளை அந்தந்த தேசியத்தின் நியமிக்கப்பட்ட மன்னர்களை கொண்டே ஆண்டு வந்தனர். அவர்கள் வெற்றி பெற்ற பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை என்றுமே பறித்ததில்லை.

 

 

இன்றைய நிலையில் இந்தியா என்ற கூட்டமைப்பில் தமிழனுக்கான இடம் பிரதிநிதித்துவமா ?! அல்லது அடிமைத்தனமா ?!

 

 

ஆரியமும், திராவிடமும் சேர்ந்து செய்த, செய்யும் துரோகமும், சதி செயலும் ஒன்றா, இரண்டா !

 

 

பிரிட்டானியனிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் இன்று எழுபது ஆண்டுகளுக்குள் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து, ஆரியமும், திராவிடமும் கூட்டுக் கொள்ளை இட்டு நிர்மூலம் ஆக்கினார்கள்.

 

 

இருபது நாடுகளின் ஒத்துழைப்போடு ஒரு தேசிய இனத்தின் வாழ்வியல் சுவடு கூடத் தெரியாமல் சுடுகாடாக்கியது யாருடைய நலனுக்காக !

 

 

இருபத்தி ஐந்து மைல் தொலைவில் இருந்தும் எங்களால் எங்கள் எதிரியை அடையாளம் காணாமல் இருக்க முடியுமா !

 

 

தமிழினம் சர்வ தேச ஒடுக்குதலில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளது.

 

 

உலகமயமாக்கலும், சர்வதேசியமும் தமிழனுக்கும் தேவையாய் இருந்தாலும், அதை தீர்மானிக்கும் உரிமை நமக்கானது (தமிழனுக்கானது) ஆகும்.

 

 

ஏகாதிபத்தியத்தின் அடிமையாகி போன இந்தியாவிற்குள் தமிழன் அடிமையா ! நீயோ அடிமை ! உனக்கு நான் அடிமையா ! என கேட்கும் நிலைக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்தை இந்திய அரசமைப்பு தரம் தாழ்த்தி உள்ளது.

 

 

ஒன்று பட்ட இந்தியாவிற்குள் தமிழ் இனத்தை அடைத்திருப்பது என்பது பெரும் மோசடியே ஆகும் ! உலக வரைபடத்தில் நாடுகளின் எல்லைகள் வரலாற்று நெடுகிலும் மாறாமல் நிலையாக இருந்ததாக வரலாறே இல்லை ! இனியும் அவ்வாறே இருக்கப் போவதும் இல்லை ! சூழ்ச்சியும், துரோகமும் தானே இந்திய வரைபடம் ! இந்த இலட்ணத்தில் பிராமணர்கள் எல்லோரும் யூதர்கள் வழி வந்தவர்கள் ! என்ற பொய் பிரச்சாரம் வேறு ! அகண்ட பாரதத்தை ஒடப்பில் போட்டு விட்டு, சர்வ தேச பாரதம் என்ற கற்பனையான சூழ்ச்சி கனவு வேறு ! அதாவது இந்துத்துவம் வல்லரசாக வேண்டுமாம் ! பிராமணர்கள் யூதர்களா என்பதை பின் வரும் பதிவுகளில் அலசுவோம்.

 

 

தமிழனை எப்படியாவது இந்துக்கள் ஆக்கிவிட துடிக்கிறது ஆரியம் ! திராவிடர்களாக அடையாளப்படுத்துகிறது வடுகம் !

 

 

இந்து என்பது மதம் அல்ல ! இந்து என்பது நாவழந்தீவில் வைதீக வந்தேரிகளால் மேலெழுந்த ஏக போக மேலாதிக்க அரசியல் !

 

 

திராவிடம் என்பது இனம் அல்ல ! தமிழ் தேசிய இனத்துக்குள் உட் புகுந்து ஒட்டுண்ணியாய் வாழ்ந்து வளம் கொழிக்க, வந்தேரி வடுக, கன்னட வல்லாதிக்கத்தை, தமிழகத்தில் நிலை நிறுத்தி, உலக தமிழர்களிடமும் மேலாதிக்கம் செலுத்திட துடிக்கும் ஒரு கற்பனா தேசிய இன மேலாதிக்க அரசியல் ஆகும்.

 

 

திராவிடம் என்பது இந்துத்துவ அரசியலின் நிழல் அரசியல் கோட்பாடாகும் !

 

 

அந்த இறுமாப்பில் தான் திராவிடத்தை யாரும் அழிக்க முடியாது என்கின்றனர் வடுகர்கள் !

 

 

ஆரிய, திராவிட அரசியலை உலக தமிழர்கள் புரிந்து வைத்திருப்பினும், பூர்வீக தமிழக மண்ணில் தமிழக மக்களை ஏமாளிகளாக்கி வைத்திருக்கிறோம் என்ற இறுமாப்பில் தான் அவர்களை இப்படி எல்லாம் பேச வைத்திருக்கிறது.

 

 

தமிழர்களை நாம் திராவிடர்கள் என்ற மனோ நிலையில் இருந்து மீட்க முடியாது ! என்றால், இந்து என்ற கருத்தியலில் இருந்தும் மீட்க முடியாது !.

 

 

தமிழர்களை இந்து என அறியப்படுகிற கருத்தியலில் இருந்து மீட்க முடியாது ! என்றால் திராவிடன் என்கின்ற மனோ நிலையில் இருந்தும் மீட்க முடியாது !.

 

 

தமிழனுக்கு கடவுள் உண்டு ! ஆனால் மதமில்லை !

 

 

தமிழனுக்கு அரசும், அரசியலும் உண்டு ! ஆனால் தேசம் இல்லை !

 

 

தேசத்தை அடைய தேசியம் வேண்டும் ! தேசிய இன பார்வை வேண்டும் ! தேசிய இன ஓர்மை வேண்டும் ! மொழிப் பற்று வேண்டும் !

 

 

உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டியது என்னவென்றால் நான் இந்து அல்ல ! திராவிடனும் அல்ல ! நான் மதமற்றவன் ! (தேவை பட்டால் உருவாக்குவோம்). நான் தமிழன் ! என இன்றல்ல, வழி வழி சந்ததி சமூகமாக சொல்லி வாருங்கள் ! தமிழ் தேசியம் தானே மேலெழுந்து வரும் ! தமிழ் தேசம் கண்டடையப் படும் !

 

 

பயணம் தூரம் தான் ! ஆனால் வெற்றி உறுதி !

 

தமிழரின் அடையாளம் கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2018/06/blog-post.html

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக