முத்தலாக் தடை சட்டம் நன்மையா ! தீமையா !

முத்தலாக் தடை சட்டம் நன்மையா ! தீமையா !

 



இஸ்லாமிய மதம் கொண்டுள்ள சட்டங்கள் அரேபியர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டங்களாகும். இதில் சிவில் சட்டம் என்றோ, கிரிமினல் சட்டம் என்றோ அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் திரு-குரான் பிரித்து வகைபடுத்தவில்லை. நம் நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் இதை வகைப்படுத்தி சிவில் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இஸ்லாமிய அடிப்படை சட்டங்களை (சரியத்தை) தங்களுக்கான சிறப்புச்சட்டமாக பெற்றுக் கொண்டு, குற்றவியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் படி அனைத்து இந்தியரை போல் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். எவரும் இவர்களுக்கு மட்டும் சிவில் வழக்குகளில் ஏன் சிறப்புச் சட்டம் தந்தீர்கள் என்று கேட்பதில்லை.

 

இஸ்லாமியர்கள் தங்களுக்குள் சிவில் வழக்குகளில் அரேபியர்களாகவும், குற்றவியல் வழக்குகளில் பொதுவில் இந்தியர்களாகவும் வாழ்கிறார்கள். இதை வைத்துத் தான் இந்துத்துவவாதிகள் இவர்களை இந்தியர்களல்ல அரேபியாவுக்கு விரட்டிவிட வேண்டும் என்கிறார்கள். இதை சொல்லுவதற்கு இவர்களுக்கு யோக்கியதை இல்லை என்றாலும் தமிழர்களாகிய நாம் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டாக வேண்டும்.

 

தமிழக மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வரும் மதங்களில், எந்த ஒரு மதமும் இம் மண்ணில் தோன்றிய மதமில்லை. இம்மண்ணில் இம்மக்களுக்காக தோன்றிய மார்க்க நெறிகளான சமணம் (ஜைனம் அல்ல) என்னும் ஆசிவகம், சைவம், மாலியம் என்னும் வைணவம் என அனைத்தும் வைதீக பிராமணியத்தால் அழித்தொழிக்கப்பட்டு, அதன் அடையாளங்களில் முதன்மையானவைகளை தமிழனிடமிருந்து திருடி இந்து மதமாக உருவக படுத்தப்பட்டு விட்டது. எஞ்சிய எச்சங்கள் கிராமப்புரங்களில் சிறு தெய்வ வழிபாடாக வரலாற்று ஆதாரமின்றி ஈ.வெ.ரா. போன்றவர்கள் தமிழர்களை காட்டுமிராண்டிகள் என சொல்லும் அளவிற்கு தொன்மையான வழிபாட்டு முறையாகி நீர்த்துப் போய் கிடக்கிறது. 

 

தமிழனை தமிழனே ஆள வேண்டும் எனக் கூறும் தமிழ் தேசியவாதிகள் நாளை தமிழனின் ஆட்சியில் தமிழ் இஸ்லாமிய பெண்களுக்கான வாழ்வுரிமைக்கு சட்டம் இயற்ற கடமைப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

முத்தலாக் தடை சட்டத்தையும், பொது சிவில் சட்டத்தையும் ஆதரித்தால் நம்மை இந்துத்துவவாதி என முத்திரை குத்திவிடுவார்களோ எனக் கருதியே பின் வாங்குகிறார்கள். இந்த முத்திரையை திராவிடவாதிகள் தான் தமிழ் தேசியவாதிகள் மீது குத்த காத்திருக்கிறார்கள். இந்நிலையில் சிறுபான்மையினர் என கூறிக் கொண்டு சிவில் வழக்குகளுக்கு அரேபியனாகவும், குற்றவியல் வழக்குகளுக்கு இந்தியனாகவும் வாழ்ந்துகொண்டு இம்மண்ணையும், மக்களையும் ஏமாற்றும் கூட்டமாக இருந்து வருகிறார்கள்.

 

இஸ்லாமியர்களில் தன்னை தமிழன் என உணரும் வெகு சிலரை தவிர பெரும்பான்மை இஸ்லாமியர்கள் திராவிடத்தின் பக்கம் நிற்பதும் இஸ்லாமிய தலைமைகளில் திராவிட இயக்கங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும், தமிழ் தேசியத்தின் மீதான அவர்களின் வெறுப்பும், எதிர் உணர்வும் மறுப்பதற்கில்லை.

 

இந்து மதத்தை விமர்சிக்கும் ஒருவன் இஸ்லாத்தில் ஒரு குறையை சுட்டி காட்டி விட்டால் நம்மை முட்டாள் என்றும் எதிரி என்றும் கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன், கழுத்தை வெட்டுவேன் என்பார்கள். பலருக்கும் அச்சத்தை உண்டாக்க கூலிப்படை வைத்து செய்தும் காட்டுவார்கள்.

 

ஈழத்தில் ஆளும்வர்க்கத்துக்கு ஆதரவாக தமிழர்களை காட்டி கொடுத்தவர்களும், ஒரு உயிருக்கு (இராஜீவ் காந்தி) ஒன்றரை இலட்சம் தமிழனின் உயிர் போதாது என்றவர்களும் இவர்கள் தான் !

 

இந்தியா முழுவதும் பெரும்பான்மை மக்கள் இஸ்லாத்திற்கு மாறிவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம் அப்பொழுது சிறுபான்மை இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் இஸ்லாமிய இந்திய அரசு சிறப்புச்சட்டம் தருமா அல்லது ஒட்டு மொத்த இஸ்லாமிய சரியத் சட்டத்தை நடைமுறைப் படுத்துமா என்று சற்று யோசித்து பாருங்கள் !

 

முத்தலாக் தடை சட்டத்தை எதிர்ப்பது ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு தேவையாய் இருக்கலாம். உண்மையில் தமிழர் நலன் விரும்பும் ஒரு தமிழ் தேசியவாதிக்கு முத்தலாக் தடைச் சட்டத்தையும், பொது சிவில்ச் சட்டத்தையும் எதிர்ப்பது அவசியமற்றது. ஏனெனில் இஸ்லாமிய தமிழச்சிக்கு முத்தலாக் தடை சட்டமும் தன்னை தமிழனாக உணர்ந்து அனைத்து தமிழ் மக்களோடும் தீண்டாமையற்று வாழ நினைக்கும் தமிழ் பற்றுள்ள இஸ்லாமிய தமிழனுக்கு பொது சிவில் சட்டமும் பயனளிக்கும்.

 

நாம் செய்யவேண்டிய நன்மையை நம் பகைவனே செய்வானாகில் அமைதி காப்பது நமக்கு நன்மையே !

 

இந்தியாவில் அதிகாரமிக்க வல்லாதிக்க ரவுடி அவன் பகை தீர்க்க இந்தியாவில் அதிகாரமற்ற ஒரு சர்வ தேச வல்லாதிக்க ரவுடியிடம் அடிமைபட்டு கிடக்கும் பெண்களை விடுவிக்கிறான். இதில் அப்பாவி மக்களுக்கு தீமை என்ன இருக்கிறது ? நன்மை தானே !

 

தலாக்கும் பொது சிவில் சட்டமும் கட்ருரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2016/11/blog-post_29.html

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

 

 

#தலாக் #3தலாக் #பொது_சிவில்_சட்டம் #இஸ்லாம் #சரியத் #முஸ்லிம் #பெண்ணுரிமை #தமிழ்தேசியம் #திராவிடம் #இந்தியதேசியம் #இந்துத்துவம்

#triple_talaq

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக