ஆரிய திராவிடன் தமிழனின் மடி பறித்தக் கதை !!



                ஆரிய திராவிடன் தமிழனின் மடி பறித்தக் கதை !!

                                                                     முன் ஒரு காலத்தில் நாவலந்தீவு என்ற ஊர் ஒன்று இருந்தது. அதில் தமிழனாகிய என்னுடைய முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். எங்கள் வீட்டை சுற்றி திராவிடனென்ற பங்காளிகளும் வாழ்ந்து வந்தார்கள் எங்கள் (தமிழனின்) முன்னோர்களை, திராவிடர்களின் முன்னோர்கள் கொலை செய்தும் மிரட்டியும் அவர்களின் சொத்துக்களை எல்லாம் பறித்தார்கள். பிராமண பூசாரிகளிடம் குறிகேட்டு ஏமாந்தும், தங்களுக்குள் ஒற்றுமை இழந்து போனதால் திராவிட பங்காளிகள் எங்கள் (தமிழர்கள்) முன்னோர்களின் வீட்டிற்குள்ளும் புகுந்து கலகம் விளைவித்து எம் முன்னோர்களை அடக்கி ஆண்டார்கள். காலங்காலமாய் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் சொத்துக்களை தொடர்ந்து அபகரித்து வந்தார்கள்.

                            போன தலைமுறையில் கூட நாவலந்தீவு நாட்டாமைக் காரனின் மூலை சலவையாலும் அதிகார பலத்தாலும் எங்கள் பாட்டனார் காமராசு தமிழனிடம் நம் ஊரெல்லாம் ஒரே சொந்தங்கள் தான் என்று சொல்லி எங்கள் வாயில் மண்ணை அள்ளிப் போட்டார்கள். சொத்தை பட்டாத்தருகிறேன் எனக்கூறிக் கொண்டு வடக்கே இருந்த எங்களுக்குச் சொந்தமான சித்தூர், திருவேங்கடம், கோலார், மைசூர் வரையும் மேற்கே இருந்த தேவி குளம், பீர் மேடு, பாலக்காடு, பத்மநாத புரம் என எம்முடைய மொத்தக் குடும்ப சொத்தையும் பூர்வீக மண் அனைத்தையும் திராவிட பங்காளிகளுக்கு பட்டா போட்டுக்கிட்டாங்க எங்களுக்கு சொந்தமான காவேரிங்கிற நீர் வரத்து மடை திறக்கும் பகுதியையும், முல்லை பெரியாரு எங்கின்ற நீர் வரத்து மடை திறக்கும் பகுதியையும் ஆளுக்கொரு பக்கம் என் பக்கத்து வீட்டுக் காரங்களுக்கு நாவழந்தீவு நாட்டாமைக் காரனை வைத்து பட்டா போட்டு வாங்கிகிட்டு, எங்களுக்கு விவசாயத்துக்கு தண்ணி கொடுக்க மாட்டோகுராங்க ! குடிக்ககூட தண்ணி கொடுக்க மாட்டேங்குராங்க ! எங்க தோட்டத்தில் புகுந்து நிலக்கரி எடுத்து மின் சாரம் தயாரிச்சு எங்களுக்கு தண்ணி தர மாட்டேன்னு சொன்ன பக்கத்து வீட்டு பயலுகளுக்கு இந்த நாவலந்தீவு நாட்டாமைக்காரன் கொடுத்து வருகிறான் அதுமட்டுமா ! கிழக்கே கடலாய் இருக்கிறது இல்லாட்டினா இதையும் இந்த திராவிட பயலுகளுக்கு பட்டாப் போட்டு குடுத்தாலும் கொடுப்பான் இந்த நாவலந்தீவு நாட்டாமை காரன் என நினைத்து கொண்டிருந்த வேளையில் கடலுக்குள்ளும் எங்களுக்கு சொந்தமான கட்சத்தீவுங்குற அழகிய தீவை பக்கத்து ஊரு நாட்டாமக் காரனுக்கு தானமாக பட்டாப் போட்டு கொடுத்துவிட்டார்கள். எங்கள் மூதாதையர் சொத்தை, எங்கள் அப்பன் வீட்டு சொத்தை எப்படியெல்லாம் மடி பறிக்கிறார்கள் பார்த்தீர்களா !

                          முன்னொரு காலத்தில் எங்கள் சொத்தை அபகரித்ததோடு நிற்க்காமல் தற்ப்போது எங்கள் வீட்டுக்குள்ளும் வந்து தின்னு, உன்னு அனுபவித்துவிட்டு இங்கேயே படுத்துறங்க ஆரம்பித்து விட்டார்கள். என்னடா இது ! பெரிய சோதனையாக இருக்கிறதே என எம்முடைய மூத்த சகோதரன் (தமிழ் பார்ப்பான்) கத்தத்துவங்கியதும் பக்கத்து வீட்டு திராவிட பங்காளிகளின் அப்பன் ஈ.வெ.ராமசாமி எங்க வீட்டுக்குள்ள வந்து என் பிள்ளைகளெல்லாம் இங்க தான் இருப்பானுக. இந்த வீட்டை நான் தான் நல்லா வழி படுத்துவேன் ஒங்க வீடு அப்பன் இல்லாத வீடு ( தலைவனுமில்லை, தலைமையும் இல்லை). இனிமேல் நான் தான் உங்களுக்கும் அப்பன் என்று சொல்லிய கையோடு ஒங்க ஆத்தா ( தமிழ் தாய் ) இந்த மூத்த பயலை (தமிழ் பார்ப்பான் ) என் அண்ணனுக்கு (தமிழனுக்கு) பெறவில்லை நாவலந்தீவு நாட்டாமை காரன் மகன் ஆரியனுக்கும் எங்க அண்ணி ( தமிழ் தாய் )க்கும் கள்ள உறவில் பிறந்தவன் என்று சொல்லி என் தாயை பழித்தான். என் மூத்த சகோதரனை (தமிழ் பார்ப்பானை) திக்கற்றவனாக்கி தினறடித்தான். என் உடன் பிறந்த மற்ற சகோதரர்களும் திராவிடன் வீட்டு பிள்ளைகளோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு என் மூத்த சகோதரனை பழிக்க அவன் நேராக சென்று நாவலந்தீவு நாட்டாமை காரனிடம் முறையிட என் மகன் ஆரியனுடன் சேர்ந்து நீயும் ஒரு பிள்ளையாக இருந்துவிட்டு போ என சொல்லி அவனுடனேயே தங்கவைத்து விட்டான்.

                                         எப்படியோ தமிழன் குடும்பம் அழிந்தால் சரி ! நாம் செய்ய நினைத்த வேலையை இந்த திராவிட அப்பன் ஈ.வெ.ரா. சுலபமாக்கி விட்டான் நம்மை வெளிப்படையாக பகைப்பதுபோல் நாடகமாடிக்கொண்டு திட்டிக்கொண்டே நாம் செய்ய நினைத்த வேலையை அவன் செய்கிறான். இந்த முட்டாள் தமிழன் பிள்ளைகளுக்கு நாட்டாமைக் காரனான நாமும், திராவிட அப்பன் ஈ.வெ.ரா. வும் ஒரே வேலையைதான் செய்கிறோம் என்பது கூட புரியாமல் இருக்கிறார்களே என சந்தோசப்படுகிறான்.

                                       என் அன்னை தமிழ் தாயோ ! எல்லாம் கையை மீரி போய்விட்டது. எம்பிள்ளைகள் நம் குடும்பத்தின், மூதாதையரின் பெருமையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். நம் குடும்ப குலப்பெருமையை திராவிடனின் குலப்பெருமை என்று சொன்னால் அதை நம்பி ஆமாம் என்கிறார்கள். இதை பார்க்க சகிக்காமல் திக்கற்று நிர்க்கிறாள் தமிழன்னை. அவளை கை, கால்களில் விழங்கிட்டு நாட்டாமைக் காரனின் பட்டறையிலும், ஆரியனின் கருவரையிலும் சிறை வைத்திருக்கிறார்கள். என்றாவது ஒரு நாள் என் பிள்ளைகளுக்கு அறிவு வந்து என் கை, கால் விலங்கை உடைத்து என்னை மீட்ப்பார்களென காத்திருக்கிறாள். திராவிடபிள்ளைகளோ நமெல்லாம் ஒரே குடும்பம் எனச் சொல்லி உங்கம்மா தான் எங்கம்மா, எங்கம்மா தான் உங்கம்மா, தமிழச்சி தான் திராவிடச்சி, திராவிடச்சி தான் தமிழச்சி, நாங்களும் தமிழச்சி பெத்த பிள்ளைகள் தான், நீங்களும் திராவிடச்சி பெற்ற பிள்ளைகள் தான் என குழப்பி என் தமிழ் சகோதரர்கள் அனைவரையும் நம்பவைத்து விட்டார்கள்.

                                             ஆனால் நடப்பது என்ன ? அவுங்க ஆத்தா திராவிடச்சி வந்து கறியுஞ்சோறுமாக்கி அவளுடைய பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டு என்னோட சகோதரர்களில் ஒருவனுக்கு (தலித்) மட்டும் கொஞ்சம் எலும்புத்துண்டும், கறித்துண்டும் கொடுத்து உன் பெயர் இனிமேல் ஆதி தமிழனில்லை, ஆதி திராவிடன் எனச் சொல்லிக்கொடுக்க, நாவலந்தீவு நாட்டாமைக் காரனும் அப்படியே பேர் வை. அதுதான் சரின்னு சொல்ல அதுவே அவன் பெயர் ஆயிடுச்சு. ஏற்கனவே எங்க குடும்பத்துல திராவிடர்கள் உருவாக்கிய சகோதரப் பகையை அப்பப்ப தட்டிவிட்டு ஊதி பெரிசாக்க நாங்க ஒற்றுமையில்லாம அஞ்சுக்கும் பத்துக்கும் உருப்படாத காரணத்துக்கும் சண்டையிட திராவிடன் பிள்ளைகள் நன்றாக கறியும் சோறும் விருந்துண்டு அது அவர்கள் நெஞ்சை தாண்டி மூக்கில் வரும் போது மீந்து போனதை எங்களுக்கு அள்ளிவீச, அதை என் சகோதரர்கள் பெறக்கி தின்றுவிட்டு திராவிட சகோதரர்கள் நால்லா இருக்கனும் என்று வாழ்த்துகிறார்கள். எனக்கு ஒரு வாரம் ஊறிப்போன ஊசின கஞ்சியை கொடுக்கிறார்கள். நாய்ங்ககூட திங்க மாட்டேங்குது. எல்லாம் இந்த திராவிட அப்பன் ஈ.வே.ராமசாமியால் வந்த வினை என்று நான் திட்டினால் என் சகோதரர்கள் சொல்லுகிறார்கள் :- உனக்கு பசி, பட்டினி இல்லாம இந்த கஞ்சியாவது கிடச்சதுன்னா அதுக்கு ஈ.வே.ரா பெரியப்பா தான் காரணம் தெரியுமா !! அவர் சாகும் முன் எல்லா ஏற்ப்பாடும் செஞ்சு வச்சிட்டாரு. சொத்து பூராவும் நீங்க வச்சிகிட்டாலும் ஊசின கஞ்சியாவது கொடுத்து என் அண்ணன் (தமிழன்) பிள்ளைகள காப்பாத்துங்கடா !! பட்டினி போட்டு கொன்னுபுடாதீங்கடான்னு அவர் பிள்ளைகளுக்கு சொல்லிட்டு செத்துருக்காரு. அவர் போனதுக்கு பிறகு அவர் பிள்ளைகள் தான் நமக்கு வழிகாட்டி ! நமக்கு அவ்வளவு புத்தி பத்தாது. நம்ம அறிவைவிட ஈ.வெ.ரா பெரியப்பா அறிவே சிறந்தது ! இந்த மாதிரியெல்லாம் ஈ.வெ.ரா பெரியப்பாவை திட்டாதே ! இப்படி தைரியமா திட்டுரியே அதுக்கே அவர்தான் காரணம், பார்த்துக்க ! என்றான்.

                                  இதைக்கேட்டதும் என் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வரவில்லை என் நெஞ்சிலும் ஈரம் கசிந்தது. தொட்டுப் பார்த்தேன் இரத்தம் சொட்டியது. தமிழ் தாய் கை கால்களில் விழங்கிட்டு நாட்டான்மைக்காரனின் சிறையிலும் அவன் மகன் ஆரிய பிராமணனின் கருவரையிலும் அடிமையாய் இருக்கிறாள். இவங்களோ (தமிழ் சகோதரர்கள்) திராவிட அடிவருடியாகி முட்டாளாய் இருக்கிறார்கள். தமிழனின் மொத்தக் குடும்பத்தையும் ஆதியில் இருந்து வழி வழியாய் மடி பறித்ததால் எல்லாம் இழந்தோம். மானம், மரியாதை, சொத்து, சுகம், வாழ்வு அனைத்தும் பறிபோயிற்று. தமிழனின் மடிபறித்த கதையை என் தமிழ் சகோதரர்கள் என்று அறிவார்களோ ! அன்றுதான் என் தமிழன்னை விடுதலை பெறுவாள் என எண்ணிய படி கண்ணீர் துளிகளை சிந்திவிட்டு ஊசிப்போன கஞ்சியை என் சகோதரர்களை போல் நானும் உரக்க உறிஞ்சி விட்டு கஞ்சியில் உள்ள பூஞ்சாணம் தலைக்கு ஏற சோகத்தில் சோர்வுடன் கண்ணயர்ந்தேன்.  

பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு தமிழின எதிர்ப்பே ! கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2016/01/blog-post.html