தமிழும், ஈ.வெ.ரா.வும்:-
வடுகனும்,
கன்னடனும், மலையாளியும் அவனவன் பூர்வீக மண்ணில் திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது
என்பார்கள். தமிழகத்தில் பிழைக்க வரும் பொழுது, நாம் எல்லோரும் திராவிடர்கள் என்பார்கள்.
தமிழகத்தில்
முதல் முறையாக இந்திக்கு 1922ல் விளக்கு போட்டவர் ஈ.வெ.ரா., பேராய கட்சியில் இருந்த
போது ஈரோட்டில் இந்தி பள்ளி ஒன்று ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார். பேராய கட்சியில்
இருந்து விலகிய பின் அக்கட்சிக்கு எதிர் நிலையாகத் தான் இந்தியை எதிர்தாரே அன்றி, உணர்வால்
அல்ல !
ஈ.வெ.ரா.,
இந்தியை தமிழ் பற்றால் எதிர்க்கவில்லை ! பேராயத்தை தாக்க இந்தி எதிர்ப்பு ஒரு நல்ல
கருவியாய் கிடைத்தது என்று வெளிப்படையாய் சொன்னார் என்று தேவநேய பாவாணர் கூறுகிறார்.
பேராயக் கட்சியில் இருக்கும் போது ஆதரித்தது, பின் அதை விட்டு விலகிய பிறகு அதற்கு
எதிர் நிலை அரசியல் செய்ய இந்தி எதிர்ப்பை கருவியாக்கி கொண்டது. அதன் பின், தமிழர்களிடம்
இந்தி எதிர்ப்பு தன்னியல்பாக எழுவதை கண்டவுடன் காமராசரை ஆதரிப்பது மூலம் தமிழுக்கு
கேடு செய்ய நினைத்தது, இப்படி மாறி, மாறி நிலை பாடு எடுத்து தமிழுக்கு தீங்கு விளைவித்து,
தன் திராவிட சகாக்களை கொண்டே அறுவடை செய்ய வித்திட்டார் ஈ.வெ.ரா.
திராவிடவாதிகள்
தங்களுக்குள் சண்டை இட்டு கொள்வதும், பின் தேவைப்படும் பொழுது கூடிக்கொள்வதும் தமிழனை
ஏமாற்றும் சூட்சும அரசியலாகும்.
இறை
நம்பிக்கை உள்ள தமிழ் அடிமைகள் அன்று வடுக பிராமணனை (சங்கராச்சாரியாரை) பல்லக்கில்
தூக்கினால், இறை மறுப்புள்ள தமிழ் அடிமைகள் வடுக கன்னடனுக்கு (ஈ.வெ.ரா.) பல்லக்கு தூக்கினர்.
இன்றோ வடுக யாதவனுக்கு (கீ.வீரமணி) பல்லக்கு தூக்குகின்றனர்.
01/06/1954ல்
வெளியான விடுதலை இதழில் ஈ.வெ.ரா., சொல்லுவது - நீ ஒரு கன்னடியன், எப்படி தமிழனுக்கு
தலைவனாக இருக்கலாம் என்று என்னை கேட்கிறார்கள். தமிழன் எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா
என்றேன் என்கிறார்.
03/03/1965ல்
விடுதலை இதழில் தலையங்கத்தில், இந்தி விசயத்தில் நீதானே எதிர்ப்பை உண்டாக்கினாய். இப்போது
இந்திக்கு அடிமையாகிவிட்டாயே என்று பலவாராக எனக்கு வசவு கடிதம் எழுதி வருகிறார்கள்.
தமிழ் கெட்டு விடுமே என்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை தமிழ் கெடுவதற்கு
தமிழில் எதுவுமே இல்லை ! புலவர்களே தமிழை கெடுத்துவிட்டார்கள். காமராசர் ஆட்சி அவசியமா
அல்லது இந்தி ஒழிய வெண்டியது அவசியமா என்று என்னை யாராவது கேட்டால், காமராசர் ஆட்சிதான்
அவசியம் என்று பலமாக சொல்லுவேன் என்கிறார்.
தமிழ்
என்றுமே கெட்டதில்லை ! ஆனால் விஜய நகர ஆட்சியில் தமிழ் புலவர்கள் கெட்டனர். மூவேந்தர்கள்
ஆட்சியிலும், களப்பிரர்கள் ஆட்சியிலும் தமிழ் புலவர்கள் போற்றப்பட்டனர். இதனால் வளமான,
மக்களுக்கான அறம் சார்ந்த இலக்கியங்கள் படைக்கப்பட்டன. பிராமணியம் அரச தலைமையில் ஒட்டிக்
கொண்ட பின்பும், மொகலாயர் ஆட்சியிலும், வடுக விஜய நகர ஆட்சியிலும் தான் தமிழ் புலவர்கள்
அரசு ஆதரவின்றி வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். வயிறு வளர்க்க வடுக மன்னர்களையும், செல்வந்தர்களையும்
போற்றிப் பாடி, பிழைப்பு நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு கெட்டனர். அது இன்றுவரை தொடர்கிறது.
வடுக தலைமையை போற்றி பாடினால் மட்டுமே, வறுமை இன்றி செழிப்பாக வாழ முடிகிறது.
தமிழ்,
தமிழர், தமிழ் நாடு, தமிழ் அரசு என்று கூற கூடாதென்றும் திராவிடம், திராவிடர் திராவிட
நாடு, திராவிட அரசு என்று தான் சொல்ல வேண்டும் என்றும், தமிழை முதன்மை படுத்துவோர்
பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்றும் பேசி வந்தார்.
கேரளத்திலோ,
ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ சென்று அவர்கள் மொழி, தேசியம் குறித்து அம்மக்களை பார்த்து
பித்தலாட்டக் காரர்கள் என்று கூறினால் சும்மா விடுவார்களா ! அல்லது ஈ.வெ.ரா., அங்கு
சென்று இப்படி பேச முடியுமா ! அல்லது அவரின் இன்றைய சகாக்கள் தான், அந்த தேசங்களில்
சென்று பேசிவிட்டு உயிரோடு திரும்பி விடுவார்களா ! இவர்களின் கால்களில் விழுந்து கிடக்கும்
தமிழர்களில் சில திராவிட அடிமைகள் தங்களை நான் தமிழன் ஆனால் திராவிடன் என கிறுக்கன்களை
போல் பேசி திரிகிறார்கள்.
திராவிடனென்றால்
தமிழனின் மண், வளம், செல்வம், உழைப்பு, அரசியல் அனைத்தையும் திருடிக்கொண்ட திருடன்
என்று அர்த்தம் !
தங்கள்
மீது சுமத்தப்பட்ட உண்மையான இழிச்சொல்லை தான் மு.கருணாநிதி இந்து என்றால் திருடன் என்று
எழுதினார்.
வேலிக்கு
ஓணான் சாட்சி ! ஓணானுக்கு வேலி சாட்சி ! நமக்கு இரண்டும் ஒன்று தான் !
அதனால்
தான் நாம் தமிழர்கள் யாரும் இந்து என்றோ, திராவிடன் என்றோ சொல்ல வேண்டாம் என்கிறோம்.
ஆரியத்தால்
இந்துவாக்கப் பட்டோம் ! வடுகத்தால் திராவிடர் ஆக்கப்பட்டோம் !
இனி தமிழன் தமிழனாகவே வாழ்வோம் !
வடுகத்தின் வல்லாதிக்க திமிர் ! என்ற கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2019/02/blog-post.html
-தமிழர்
வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).