தமிழர்களுக்கு தேசிய இன உணர்வு வேண்டும் ! ஏன் ?!


தமிழர்களுக்கு தேசிய இன உணர்வு வேண்டும் ! ஏன் ?!

 


உலகில் எங்குமே தமிழகத்தை தவிர சிறுபான்மை தேசிய இனம் பெரும்பான்மை தேசிய இனத்தை ஆண்டதில்லை ! ஆள்வதுமில்லை !! நம் அண்டை மாநிலங்களில் மாநில கட்சிகளை விட அகில இந்திய கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சினாலும், அவர்கள் தேசிய இனவாதிகளாக இருந்து கொண்டு, அகில இந்திய கட்சியின் பெயரை முகவரியாக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

 

அந்த மாநிலங்களில் தேசிய இனத்திற்கு ஆட்சியாளர்கள் ஊறு விளைவிப்பதாக மக்கள் உணர்வார்களேயானால் அடுத்த தேர்தலில் அவர்கள் ஆட்சி அதிகாரத்தை இழந்து விடுவார்கள். இதனால் போட்டி போட்டுக் கொண்டு அங்குள்ள அகில இந்திய கட்சிகளே அந்த தேசிய இனத்திற்கான உரிமைகளை விட்டு கொடுப்பதில்லை. அகில இந்திய தலைமைக்கு கட்டுப்படுவதும் இல்லை. அகில இந்திய கட்சியின் கொள்கைகளை மதிப்பதும் இல்லை. அகில இந்திய கட்சி தலைவர்கள் தமிழகத்தில் பேசும் பேச்சு ஒரு விதமாகவும், நம் அண்டை மாநிலங்களில் பேசும் பேச்சு வேறு விதமாகவும் இருப்பதை காண்கிறோம். அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட ஏற்பதும் இல்லை ! மதிப்பதும் இல்லை !!.

 

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை காவு கொண்டது போல் இந்திய அரசு தலைமையில் கன்னடர்களோ, மலையாளிகளோ, வடுகர்களோ படுகொலை செய்யப்பட்டு இருந்தால் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அந்த கட்சிகள் அந்த மண்ணில் இருந்து நிரந்தரமாக அகற்றப்பட்டிருக்கும். அத்துடன் இந்திய கட்டமைப்பே ஆட்டம் கண்டிருக்கும். என்ன துணிச்சல் இருந்தால் அதே கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள். நாமும் புரிதலின்றி பல் இழிக்கிறோம் !

 

சிறுபான்மை தேசிய இன தலைவர்கள் பெரும்பான்மை தேசிய இனத்தவர்களை ஆட்சி புரிவதற்கு உருவாக்கி வைத்திருக்கும் பொய்யான அடையாளம் தான் திராவிடம் !. அதன் தந்தை ஈ.வெ.ரா !!. ஏமாற்றியவன் வடுகன் ! ஏமாந்தவன் தமிழன் !!

 

தேர்தலில் தமிழனின் கட்சிக்கு வாக்களிக்க சொன்னால் ஒரு சிலரோ, ஒரு யோக்கியனையும் காணோம் என்கின்றனர். தமிழ் மாபியாக்களுக்கு எப்படி வாக்களிப்பது என்கின்றனர். ஓட்டு கேட்டு வரும் ஆரியனும், திராவிடனும் அல்லது ஆரிய திராவிட கூட்டணிகளும் மாபியாக்கள் இல்லையா ! மாபியாக்கள் மட்டுமே கோலோச்சும் அரசியல் கட்டமைப்பு தானே நம் நாட்டின் அரசியல் வாழ்நிலை !

 

நில பிரபுத்துவ அதிகாரம் தொழில் மயப்படுத்தப்பட்ட முதலாளித்துவ ஜனநாயக அதிகாரத்திற்கு முறையாக பரிணாமம் பெறும் முன்பே பிரிட்டிசாரின் காலனி ஆகிப்போன நாம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை தொடர் அடிமைத்தனத்தை, அடிமைப் பண்பாட்டை பேணி வருகிறோம். நம் அடிமைகளில் இருந்து ஒரு தலைவன் வருவதை நாம் விரும்புவதில்லை. பிரிட்டிசார் கைமாற்றி கொடுத்து விட்டு சென்ற அந்த ஆரிய, திராவிடனுக்குள்ளேயே தலைவனை தேடிக்கொள்கிறோம்.

 

இன்று ஏக போகம் தன் அதிகாரத்தை உலகமயப்படுத்துதல் மூலம் செயலாக்க வந்த பின்பும், நம் வலிமையை நாம் பயன் படுத்துவதை விட்டு விட்டு, சிறுபான்மை தேசிய இன தலைவன்களை முன் நிறுத்தி ஆளுமை ஆற்றல் இன்றி வாழ்ந்து வருகிறோம்.

 

நம் அரசியல், பொருளாதாரம், இசை, பண்பாடு, வாழ்வியல், வர்த்தகம் என அனைத்தையும் ஆரிய திராவிட இனங்களிடம் ஏமாந்து விட்டு விட்டு கடின உழைப்பை மட்டுமே வைத்திருக்கிறோம். அதுவும் வட இந்திய மக்களின் தமிழக குடியேற்றத்தாலும், அரசு வேலையை தமிழனிடமிருந்து பறித்தெடுத்து, வட இந்திய தொழிலாளர்களுக்கு அளிக்கப்படுவதாலும் அந்த உரிமையையும் தமிழன் இழந்து வருகிறான். இனி, தமிழன் நாட்டை விட்டு ஓட வேண்டும் ! இல்லையேல் பட்டினி கிடந்து சாக வெண்டும் !! அல்லது தன்மானம் இழந்து, தகுதியற்ற வேலை செய்து உயிர் வாழ வேண்டும் என்ற நிலையே !!!

 

இனி பெரும்பான்மை தேசிய இனமான தமிழர்களை தமிழனே ஆளவேண்டும் என்ற நிலை வேண்டும். அவன் மாபியாவோ ! மாயாவியோ !! அல்லது மந்திரவாதியோ !!!

 

ஆளும் கட்சியும் தமிழன் கட்சியே ! எதிர் கட்சியும் தமிழன் கட்சியே !! என்ற நிலையை உருவாக்கவேண்டும். மக்கள் இனம், மொழி, பண்பாட்டிற்கு ஊறு நேர்ந்தால் அதை தடுக்க துப்பில்லாதவன் தூக்கி எறியப்பட்டு தமிழுக்காக வாழ்பவனுக்கு மட்டும் தான் தமிழகத்தில் இனி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

 

இனி தமிழகத்தில் தமிழன் தான் ஆளமுடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். தேசிய இன மூலதனம் மீட்டுருவாக்கம் செய்ய்யப்பட வேண்டும். அதன் பிறகு தான் ஆள்பவன் மாபியாவாக இருக்கலாமா அல்லது யோக்கியனை அதிகாரத்தில் அமர்த்தலாமா என்று முடிவு செய்ய முடியும். அரசியல், பொருளாதாரம், இசை, பண்பாடு, வாழ்வியல், வர்த்தகம் என இழந்த அனைத்தும் தமிழனின் உடைமையாக மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

 

அதற்கு தமிழன் தேசிய இன உணர்வு பெற்றாக வேண்டும் ! இல்லையேல் தமிழ் மொழியும் அழியும் ! தமிழ் இனமும் மறைந்து போகும் !!

 

தமிழ் தேசியம் என்பது பாசிசமா ? கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2019/03/blog-post.html

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

 

தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் !


தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் !

 



1.    தமிழனின் தலைமையில் கட்டமைக்கபட்ட கட்சியாக இருக்க வேண்டும்.

2.    அக்கட்சிக்கு தமிழனே தொடர்ந்து தலைவனாக இருக்க வேண்டும்.

3.    ஈ.வெ.ரா.வையோ, கருணாநிதியையோ பாட்டன் என்றோ , வழிகாட்டியாகவோ, முன்னோடியாகவோ ஏற்காத தலைவனாக இருக்க வேண்டும்.

4.    தமிழன் என்ற உணர்வோடு அனைத்து சாதி,மத மக்களையும் ஒன்றாக நேசிக்கும் தலைவனாக இருக்க வேண்டும்.

5.    கண்டிப்பாக சாதி கட்சிகளோடு கூட்டணி சேர்ந்திருக்கக்கூடாது.

6.    மத நல்லிணக்கம் பேசிக் கொண்டு தமிழ் இனத்தை அழித்தொழிக்கும் ஆரிய கட்சிகளோடு கூட்டணியில் சேர்ந்திருக்கக்கூடாது.

7.    வடுக தலைமையிலான திராவிட கட்சிகளோடு கூட்டணி சேரும் எண்ணம் இல்லாத கட்சியாக இருக்க வேண்டும்.

8.    குறிப்பாக இந்துத்துவ பாசிச கொள்கை கொண்ட கட்சிகளின் கூட்டணியில் இருக்கக்கூடாது.

9.    தேர்தல் வெற்றிக்கு பின் அதிகாரத்தில் அமரத் துடிக்கும் ஆரிய கட்சிகளை தீர்மானிக்கும் போது தன் குடும்ப நலன் பாராது, தமிழ் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கும் பண்பு இருக்க வேண்டும்.

10.                       அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஆரிய கட்சி தமிழ் மக்கள், தமிழ் மொழி, இனம், பண்பாட்டிற்கு ஊறு விளைவித்தால் பதவி சுகம் பாராது ஆரிய கட்சியின் அதிகாரத்தையே உடைத்தெறிந்து விட்டு தமிழ் மக்களின் பின்னால் வந்து நிற்கும் துணிச்சலும், தைரியமும், பண்பும் கொண்ட தலைமையாக இருக்க வேண்டும். இதற்கு முன்னால் இருந்திருக்கவும் வேண்டும்.

 

இந்த வரையறைக்குள் ஒரு கட்சி தமிழகத்தில் நிச்சயம் இருக்கும் அது எதுவென தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள். தமிழக மக்களால் அதிகம் நேசிக்க பட்ட அதிமுக தற்போது ஆர்.எஸ்.எஸ்.யின் கூடாரமாக மாறி போய் விட்டது.

 

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின் இந்துத்துவத்தின் பிரதிநிதிகள் அதிமுகவில் பல வேடங்களில் அணி அணியாய் உட்புகுந்து இந்துத்துவ கட்சியாக மாற்றி விட்டனர். இதன் தொடக்கம் தம்பி துரை துணை சபாநாயகர் பதவி அளிக்கப்பட்டதிலிருந்து வெளிப்படையாக தமிழர்களுக்கு தெரிய வந்தது.

 

இதை அம்மையார் ஜெயலலிதாவோ, அம்மையார் சசிகலாவோ நம் கட்சிக்கு டில்லியில் செல்வாக்கு கூடுவதாக தவறாக புரிந்து கொண்டு விட்டனர். இன்று எல்லாம் அழிந்து நாசம் ஆனது !

 

வட இந்தியர்களை தமிழகத்தில் அனைத்து மத்திய அரசு துறைகளிலும் அதிகளவில் பணிக்கு அமர்த்தி விட்டு, எம்.ஜி.ஆர் பெயரை ரயில் நிலையத்திற்கும் விமானத்தில் செல்வோருக்கு தமிழ் மொழியில் அறிவிப்பும் வழங்குவதால் தமிழர்களுக்கு நன்மை செய்வதாக ஆகாது.

 

தமிழர்கள் ஏமாளிகள் இலவசத்திற்கும் சலுகைகளுக்கும் ஆசைபட்டு வாக்களித்து விடுவார்கள். என இந்துத்துவ ஆரிய கூட்டணி கட்சிகள் கணக்கு போட்டிருக்கின்றனர். அந்த கற்பனையை தமிழக மக்கள் உடைத்தெறிய வேண்டும்.

 

தமிழகத்தில் இந்துத்துவத்தை வளர்த்தெடுத்து அதிகாரத்தை கைபற்றுவது இயலாத காரியம் ! எனவே மக்கள் அதிகம் நேசிக்கும் கட்சி எதுவோ, அதிக தொண்டர்களை கொண்ட கட்சி எதுவோ அதை கபளிகரம் செய்வதால் இந்துத்துவத்தை தமிழகத்தில் நிலை நிறுத்தி விடலாம். என களமிறங்கி உள்ளனர்.

 

தமிழர்களே ! எச்சரிக்கையாய் இருங்கள். இம்முறை நீங்கள் ஏமாந்து விட்டீர்களானால் உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ள இயலாது. தமிழகம் ஆரியர்களின் வேட்டை காடாகி விடும்.

 

இரட்டை இலை என்பது ஆரிய திராவிட பேய்களை விரட்டி அடிக்கும் வேப்பிலையல்ல ! அது இந்துத்துவ பேயை தாங்கி நிற்கும் தாமரை இலை !.

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

 

தமிழ் தேசியம் என்பது பாசிசமா ?!

தமிழ் தேசியம் என்பது பாசிசமா ?!

 



தன்னுரிமை இழந்து தவிக்கும் ஒரு தேசிய இனம் தனக்கான முகவரியை நிறுவிட முனையும் போது அதன் மூச்சை நிறுத்திவிட அதிகார வர்க்கம் கையில் எடுக்கும் ஆயுதமே பாசிசம் !

 

சமய வெறியை முன்னிறுத்தி அல்லது சாதி வெறியை முன்னிறுத்தி பிழைப்பு நடத்தும் பிழைப்புவாத கூட்டங்களாலும் சமய எதிர்ப்பை, சாதி ஒழிப்பை முன்னிறுத்தி பிழைப்பு நடத்தும் கூட்டங்களாலும் அடிமைப்பட்ட ஒரு தேசிய இனம் தனக்கான முகவரியை நிறுவிட பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடுகிறது !

 

பிற தேசிய இனங்களுக்கு இல்லாத ஓர் சிக்கல் தமிழர்களுக்கு உண்டு. ஒட்டு மொத்த தமிழ் தேசியர்களும் ஒரு குடையின் கீழ் தமிழர்களை ஒன்றிணைக்க இம்மண்ணிலிருந்து தோன்றிய ஓர் சமயம் இல்லை ! சாதி என்னும் குல குடும்ப அடையாளங்கள் தீண்டாமை என்னும் சேற்றுக்குள் பதித்து வர்க்க பிரிவினையை பொருளாதார அடிப்படையினின்று வேறுபடுத்தி, குலத்தின் அடிப்படையிலான வர்க்க பிரிவினையாக பிராமணியத்தால் நிலை நிறுத்தப்பட்டு விட்டது.

 

ஓர் மக்கள் சமுதாயத்தின் முன் சமூக மாற்றத்தை எங்கிருந்து தொடங்குவது எனும் பொழுது, அங்கே எது பிரதான காரணியாக உருவெடுத்திருக்கிறதோ, அங்கிருந்துதான் தொடங்கியாக வேண்டும் !

 

சாதி, சமயம், பெண்ணியம் எல்லாம் நம் தமிழ் சமூதாயத்தின் உள் முரண்பாடுகளாகும்.

 

புற காரணமான தேசிய இன ஒடுக்குமுறையை மறைக்கவே சாதி, சமய, பெண்ணியம் சார்ந்த அகக்காரணங்கள் முதன்மை படுத்தபடுகின்றன.

 

புறக்காரணத்தின் ஒவ்வொரு அசைவும் ஒரு சமூதாயத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் அதன் ஆணி வேர் வரை பாய்கிறது.

 

இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்கிறார்கள். வல்லரசு என்றால் எளியவனை வலியவன் ஆட்கொண்டு அடிமையாக்கி சுரண்டி பிழைப்பது தானே ! அமெரிக்கா அதை செய்யும் பொழுது அது தவறு ! நாம் செய்தால் அது சரியா !

 

இந்தியாவை தன்னிறைவு பெற்ற தேசமாக, வல்லரசுகளின் வலிமையை எதிர் கொள்ளும் தேசமாக ஆக்குவேன் என்று எவனாவது சொல்கிறானா !

 

தமிழகத்தில் தமிழ் தேசியர்கள் ஒருமித்த கருத்தாளுமைக்குள் வராது இருப்பதற்கும், பின்னடைவை சந்திப்பதற்கும், தமிழர்களிடையே தமிழ் தேசிய ஓர்மை வளமை பெறாமல் போவதற்கும் தமிழ் தேசியவாதிகளே காரணமாகின்றனர் ! தமிழ் இன விடுதலைக்குள் திராவிடத்தையோ, ஈ.வெ.ரா.வையோ பிரித்தறியா காரணத்தாலேயே தமிழ் தேசியம் பின்னடைவை சந்திக்க நேரிடுகிறது. பொய்யான திராவிடத்தை அல்லது திராவிடத்தை புனிதம் என போற்றும் கருத்தடிமை தமிழர்கள், தமிழ் தேசியர்கள் என்ற போர்வையில் தமிழ் தேசியத்தை திராவிட தேசியத்துக்குள் சறுக்கி விழச் செய்து விடுகின்றனர் !

 

ஈவு இரக்கமின்றி அழிக்கப்பட்டு வரும் ஒரு தேசிய இனம், தன் அழிவின் விளிம்பில் கூட வீறுகொண்டு எழவில்லையாயின், அது முற்றாக அழிந்தே போய் விடும். அவ்வினத்தின் எழுச்சியை பாசிசம் என்பார்களானால் பாசிசத்திற்கு எதிர் நிலை பாசிசமே ! அது அவசியமே !

 

ஈழ தமிழர்களை அழித்தொழித்த ஆரியர்கள் பேசும் போலி மத நல்லிணக்கமும், பிராமணியம் உயர்த்தி பிடிக்கும் இந்துத்துவமும், திராவிடவாதிகளின் திராவிட தேசியமும் சோசலிசமா ! பாசிசம்தானே !

 

“வீழ்ந்து கிடக்கும் அடிமைகள் கையில் எடுக்கும் ஆயுதம் எதுவென அவனை அடக்கி ஆளும் எதிரிகளே தீர்மானிக்கின்றனர்”.

 

தமிழ் தேசம் மலருமா ? கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2018/07/blog-post_3.html

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).