தமிழர்களின் தேசிய இன எழுச்சிப் போராட்டம் !!

 

தமிழர்களின் தேசிய இன எழுச்சிப் போராட்டம் !!

 


 

தமிழக இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டத்திற்கு எங்களின் வாழ்த்துக்களை காணிக்கையாக்குகிறோம்.

 

 

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரங்கட்டப்பட்டு, புறந்தள்ளப்பட்டுள்ளது தனிச் சிறப்பு !!

 

 

தமிழர்களின் முந்தைய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அறுவடை செய்த திராவிடவாதிகள் சுமார் ஐம்பது ஆண்டுகளில் தமிழர்களை பல்வேறு வகையில் துன்பம் தந்து நம்மை படுகுழியில் தள்ளினார்கள். இருப்பினும் நாம் மிகப் புரிதலுடன் எழுச்சிப் பெற்றுள்ளோம். இதை அறுவடை செய்ய இயலவில்லையே என்ற ஏக்கத்தில், போராடும் தமிழர்களின் தலைமை பிற்ப்போக்கு சக்திகளாக இருக்கலாம் என்றும், அல்லது ஆதிக்க சாதியாக இருக்கலாம் என்றும், இதற்கொரு அரசியல் தலைமை வேண்டுமென்றெல்லாம் கூறி குழப்பம் செய்து வருகிறார்கள். இருப்பினும் நம் இளைஞர்களிடம் எடுபடாமல் போனது. இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் பகையைதூண்ட எண்ணிய இந்துத்துவ சக்திகள் மிரண்டு போனார்கள். தமிழன் இந்து அல்ல ! உலகிலேயே மதமற்ற தேசிய இனம் தமிழ் தேசிய இனமே ! தமிழனை பிரித்து கையாண்ட அனைவரும் தோல்வியுற்றனர்.

 

 

 

இந்த எழுச்சி ஈழ தமிழ் மக்கள் படு கொலையின் போது ஏற்ப்பட்டுவிட கூடாது என்பதற்காகவே தான் தி.மு.க. அரசு ஈழப்போர்  முடியும்  வரை  நம்  கண்களை கட்டியது.  நம்  இளைஞர்கள்  ஓடிவந்த ரயிலை எதிர் நின்று நிறுத்தினர். இன்று தி.மு.க. வின் ரயில் மறியலாம். தமிழகத்தில் அனைத்து ரயில்களும் நம் தமிழ் இளைஞர்களால் நிறுத்தப் பட்ட பிறகு எந்த ரயிலை நிறுத்த இவர்கள் புறப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. முன்னர் ரயிலே வராத தண்டவாளத்தில் அப்பன் தலைவைத்து படுத்தார் இன்று ரயிலே ஓடாத போது ஓடாத ரயிலை மறிக்கிறார் மகன். எத்தனை நாளைக்குத்தான் தமிழனுடைய குருதியையும் உழைப்பையும் அறுவடை செய்து கோடிகளில் புரளுவீர்கள். அன்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழர்களை காலிகள் (காலி பயளுக) என்றார் ஈ.வெ.ரா.நாயக்கர். இன்று தமிழனின் உரிமை மீட்சி போராட்டத்தில் தமிழர்களை பொறுக்கிகள் என்கிறார் ஆரிய இந்துத்துவ சுப்பிரமணிய சாமி. தமிழன் மீதான எதிர் களத்தில் ஆரியனும் திராவிடனும் ஒன்றே ! ஆரியக் கட்சிகளோ அல்லது திராவிடக் கட்சிகளோ இனி தனியே நின்று வேடிக்கை பாருங்கள். இளைஞர்கள் தங்களுக்கான தலைமையை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள். வீர மரபில் வந்த தமினின் தேசிய இன எழுச்சியின் ஆற்றல் என்னவென்பது புரியும்.

 

தமிழ் மொழி காப்போம் ! தமிழ் இனம் காப்போம் !! தமிழ் மண் காப்போம் !!!

 

#AMEND_PCA #WE_WANT_JALLIKATTU #BANPETA #ALANGANALLUR #JALLIKATTU

 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக