குடும்பம் வன்முறையா ?!
கீழ்த்தரமான
பேராசை, மிருகத்தனமான காம வெறி, பொருள் ஆசை, பொது சொத்துக்களை சுயநலத்துக்காக கொள்ளையடிப்பது,
ஊழல் புரிவது ஆகிய இழிவான செயல்களை சமூகத்தின் எதார்த்தம் என போற்றும் அரசியல் அமைப்பு
கொண்ட சமுதாய கட்டமைப்பில் குடும்பத்தில் வன்முறை தவிர்க்க இயலாதது ஆகும்.
திருட்டு,
கற்பழித்தல், ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் போன்ற மோசமான செயல்கள் இல்லாத பழைய சமூதாய
கட்டமைப்பை படுகுழியில் தள்ளி முன்னேறி வந்த புதிய வர்க்கச்சமூதாயத்தில் அதில் குடும்ப
அமைப்பில் வன்முறையோ, சுரண்டலோ இன்றி இருக்க இயலாது.
மனைவியை
மதிக்கின்ற ஜனாயக குடும்பத்தில் கூட மனைவிக்கு தெரியாமல் கள்ள உறவுகொல்லும் ஆண்ணையும்,
மாற்றான் மனையால் மீது மோகம் கொள்ளும் ஆண் வர்க்கத்தால் பெண் காமத்தால் வீழ்த்தப்படுவதும்,
அதன் காரணாமாக மனைவியை மதிக்கும் ஜனநாயகக் குடும்பம் கூட உடைந்து படுகுழியில் வீழ்வதும்
நடந்தேறுகிறது.
அரசின்
கடைசி வடிவமாக குடும்ப அமைப்பு இருந்து வருகிறது. அக்குடும்ப அமைப்பில் மாற்றம் ஏற்படுமாயின்
அது சமுதாய கட்டமைப்பின் உச்ச அதிகார பீடமான அரசை மாற்றுகிறது.
புராதன
அநாகரீக காலத்தில் பெண்ணே குடும்ப அமைப்பில் அதிகாரம் படைத்தவளாய் இருந்தாள். குடும்ப
அமைப்பு குழு வடிவம் கொண்டிருந்தது. ஆண் குழுவுடனோ, தனித்தோ உணவுதேடும் பொறுப்பில்
இருந்தான். இவ்வேலையில் உழைப்பினின்று வேறுபட்டு பிற குல குழுக்களுடன் சண்டையிட்டு
பெறப்படும் உணவு தானியங்கள், கால் நடைகள், ஆபரணங்கள், இன்ன பிற பொருட்கள் மற்றும் போரில்
தோல்வி உற்ற குழுக்களை அடிமையாக்குதல் மூலம் ஆண் உற்பத்தி சாதனங்களை பெற்றான். பெண்
வீட்டில் பராமரிப்புக்காகவும், மகப்பேறுக்காகவும் ஒதுக்கப்பட்டாள். ஆண், பெண் இருவருக்குமான
வேலைபிரிவினையே உலகில் தோன்றிய முதல் வர்க்கப் பிரிவினை என மார்க்ஸியம் கூறுகிறது.
அதுவே சமூதயத்தையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி செல்கிறது.
குடும்ப
அமைப்பில் இன்று பின்பற்றப்படும் ஒரு தார மணமுறை ஆணுக்கும்,
பெண்ணுக்குமான ஒப்பந்தம் உடன்பாடாகினும், அதை ஆண் மீறுவது திறமை எனவும், பாராட்டுக்குரிய
விடயமாகவும், பெண்மீறுவது கீழ்தரமானதாகவும், தண்டணைக்குரியதாகவும் பார்க்கப் படுகிறது.
ஆண்ணுடைய சொத்துக்கான வாரிசை பிரதிநிதித்துவ படுத்துவதே பெண்ணின் கடமையாக இருக்கிறது.
பிற
மனையாளின் மீது மோகம் கொள்ளும் ஒவ்வொரு ஆணும், தன் குடும்ப மனையாள் திருமண ஒப்பந்தத்தை
மீறாது இருக்க விரும்புகிறான்.
ஆண்
வர்க்கம் இரு வழிகளில் பெண்ணை வெற்றி கொள்கிறது. திருமண பந்தத்தின் மூலமும், திருமண
உறவை தாண்டியும் பெண்ணை அனுபவிப்பதை நியாய படுத்துகிறது.
தண்ணுடைய
கூடா ஒழுக்கத்தை தவறில்லை என கருதும் ஆண், மனைவியின் கூடா ஒழுக்கத்தை தடை செய்கிறான்,
தண்டிக்கிறான்.
இது
எப்படி என்றால் வர்க்க சார்புள்ள அரசின் அதிகார வர்க்கம் மக்கள் உழைப்பை, வரி பணத்தை,
நலதிட்டங்களை கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் கூட்டம், சுருங்க சொன்னால் அரசை கற்பழிக்கும்
ஆதிக்க கட்டமைப்பு, தேர்தலில் காசு வாங்கி ஓட்டு போடும் பிராதன அங்கமான மக்களை தண்டிக்க
சட்டம் இயற்றுவது போல் ஆகும்.
கீழ்
நிலை பெண் ஒருத்தி உயர் நிலை அடைய பல ஆண்களின் காம பசிக்கு இரையாகாமல் உயர் நிலை அடைய
முடிவதில்லை.
ஆணுக்கு
பெண் பாடம் புகட்டும் வரை ஆண் பெண் சமநிலையை, ஆதிக்கமற்ற வளமான குடும்ப அமைப்பை அல்லது
அதற்கும் மேம்பட்ட சம நிலையை ஆண் ஏற்கப் போவதில்லை.
அதே
போல் அதிகார வர்க்கத்திற்கு மக்கள் பாடம் புகட்டும் வரை ஆதிகார வர்க்கம் தன்னுடைய ஆதிக்க
நிலையை விட்டுவிடபோவதில்லை.
ஆணின்
அதிகாரம் ஒழிக்கப் பட வேண்டுமென்றால் சமூதாயத்தில் வர்க்க சார்புள்ள அரசு அதிகாரம்
ஒழிக்கப் படவேண்டும்.
முதலாளித்துவ
ஜனநாயகம் முற்ப்போக்கானதாகினும் அது வர்க்க பகைமையோடு பயணிக்க படியால், வர்க்கங்கள்
மோதி தீர்த்துக்ககொள்ளும் களத்தை அமைக்கிறது. அக்களத்தில் ஆதிக்க சக்திகளுக்கு துணை
நின்று சுரண்டப்படும் வர்க்கத்தை பழிதீர்த்து பணிய வைக்கிறது.
கீழ்
நிலையில் வாழும் உழைக்கும் மக்கள் மத்தியில் ஆணும் பெண்ணும் சமுக உற்ப்பத்தியில் ஈடுபடுவதால்
ஆண் பெண் சமநிலை அற்ற போக்கு குறைந்து காணப்படுகிறது.
அதிகார
வர்க்கங்களில் மண உறவை தாண்டிய உறவு ஆணுக்கு கேள்விக்குள்ளாக்கப் படுவதில்லை. ஆனால்
பெண்ணுக்கு அது கள்ள காதலாய் நிலை பெற்று இருக்கிறது. இன்று முன்னேறிய சமூகத்தில் மாதாந்திர
மாற்று வாடகை கணவனோடு ஆணுக்கு நிகராக பெண் சம நிலை பெறுவது கூடா ஒழுக்கத்தின் மூலம்
நடந்தேறுகிறது.
நடுத்தர,
மத்திய தர மக்கள் மத்தியில் மண உறவை தாண்டிய உறவு வெகு சில குடும்பங்களை தவிர பெரும்பாலும்
பெண்ணை ஆண் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வஞ்சிப்பதும், பெண் ஆணின் அறிதலுக்கு அப்பாற்பட்டு
கள்ள காதல் முறையில் ஈடுபடுவதும் எதார்த்தம் ஆகிவிட்டது.
பெரும்பாலும்
குழந்தைகளுடைய உண்மையான தந்தை யார் என்பது ஓர் தார்மீக நம்பிக்கை சார்ந்த விசயமாகிவிட்டது.
மண
உறவை தாண்டிய உறவு குற்றம் இல்லை என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்திருப்பது பெண்ணுக்கு
சாதகமானதோ அல்லது பாதகமானதோ அல்ல. ஆனால் குடும்ப அமைப்பின் மீது ஓர் அதிர்வை ஏற்படுத்துகிறது.
இது ஆணுக்கு வேண்டுமானால் கூடுதல் வாய்ப்பளிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
மண
உறவை தாண்டிய உறவு குற்றமில்லை என்பதை வரிந்து ஆதரிக்கும் இன்றைய பெண்ணியவாதிகள் மற்றும்
முற்போக்குவாதிகள் முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். பலதார மண முறையில்
முஸ்லிம் மதத்தை தாண்டி இன்று நடைமுறையில் பகிரங்கமாக எதையும் அடையாளபடுத்த இயலாது.
மதத்தின் பெயரால் பலதார மணத்தை மத சட்ட வடிவமாக்கி மாறாது, மாற்றக்கூடாது என்ற இஸ்லாமிய
கொள்கையை சிறுபான்மையினர் என்பதை காரணம் காட்டி அனுமதிப்பது அபத்தமாகும். பி.ஜெ.பி.
கொண்டு வருவதால் எதிர்ப்பது என்பது என்ன வகை அறிவு ! சில நேரங்களில் நம் எதிரிகள் கூட
எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாய் இருந்தால் அமைதிகாப்பது
புத்திசாலிதனம் ! யூக அரசியல் அறிவு இன்றி இச்சமுகத்தை இனி அடுத்த கட்டம் நகர்த்த இயலாது.
இஸ்லாம் நம் நாட்டில் சிறுபான்மையாக இருக்கலாம் ஆனால் அது சர்வதேச வல்லாதிக்க போட்டி
கொண்ட பிற்போக்கான சட்டங்களை கொண்ட சமுக வளர் நிலைக்கு எதிர் நிலை கொண்ட கட்டமைப்பாகும்.
முதலாளித்துவ
ஜனநாயகம் இயற்றும் சட்டம், திட்டம், சலுகைகள் அனைத்தும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது கரிசணைக்
காட்டுவது போல், அது தனது நலனையே பிரதிநிதித்துவப் படுத்துகிறது.
முதலாளித்துவத்தின்
வளர்ச்சியில் ஏகபோகம் தன் முன் இருக்கும் அனைத்தையும் தனக்காக உழைக்கும் உற்பத்திக்
கருவிகளாகவே பார்கிறது.
இன்றைய
சமூதாயத்தின் அலகு குடும்பமாகும். அன்பு, பாசம், தியாகத்தால் நிலைப்படுத்தப்பட்டுள்ளது
என்றாலும் இத்தியாகத்தை ஆணோ, பெண்ணோ ஒரு சாரார் மட்டும் பின்பற்றுவது காலப்போக்கில்
குடும்ப அமைப்பை சிதைத்து விடுகிறது. வெகு சில குடும்பங்களை தவிர பெண்ணே இத்தியாகத்தை
செய்கிறாள். சில குடும்பங்களில் ஆண் வஞ்சிக்கப்படுவது மாற்றான் மனைவியின் மீது மோகம்
கொண்ட மற்றொரு ஆணின் முயற்சியாலேயே நடந்தேறுகிறது. இவை அனைத்தும் உழைக்கும் மக்களுக்கான
அரசியல், பொது பொருளாதாரம் இல்லாததால் விளைந்த குற்றமே அன்றி வேறல்ல.
“பொது
சொத்தை காட்டிலும் தனி சொத்து மேலோங்கிய பொழுது வாரிசு உரிமையில் அக்கறை ஏற்பட்டதுடன்,
தந்தை உரிமையும் ஒரு தார மணமும் மேல்நிலைக்கு வந்துவிட்டன. திருமணம் முன்னைவிட அதிகமாக
பொருளாதார காரணங்களை சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. விலை கொடுத்து பெண்ணை வாங்கும்
திருமணத்தின் வடிவம் மறைகிறது. ஆனால் பெண்ணை மட்டுமன்றி ஆணும் சொந்த குணங்களை கொண்டு
மதிக்கப்படாமல் சொத்துக்களை கொண்டு மதிக்கப்படும் வழியிலே அந்த பேரம் அதிகரிகின்ற முறையில்
நடத்தி முடிக்கப்படுகிறது.” – எங்கெல்ஸ்.
குடுபம்
என்பது சமுதாயத்தில் அரசின் கடைசி வடிவம் ஆகும். அது தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள
அரசின் உயர்ந்தப்பட்ச வடிவத்தை மாற்றி அமைக்க போராடும் மூலக்கருவாக இருந்து வருகிறது.
எனவே அதனுள் அதிகார வர்க்கம் தொன்று தொட்டு உருவாக்கி வைத்திருக்கும் உள்முரண்பாடுகளை
தட்டி விட்டு குடும்பத்தை சிதைத்து உதிரிகளாக்கும் வேலையை செய்கிறது.
ஏக
போகம் சமுதாய வரலாற்றின் அனைத்து அம்சங்களிலும் உள்ள அடையாளத்தை அழித்துவிடுகிறது.
சமுதாயம் முழுவதும் உதிரிப் போக்கை விதைக்கிறது. உதிரித்தனம் சமுக அக்கறையின்மையைக்
கொண்டு சுய நலத்தை பேணும் என்பதால், அதுவே சமுக முன்னேற்றம் எனவும் முற்போக்கான வாழ்வியல்
எனவும் வழிகாட்டுகிறது. இதன் மூலம் குடும்ப அமைப்பை தகர்த்து சமுதாய தேவைகளுக்கான போராட்ட
வடிவத்தில் இருந்து விலக்கி ஆண் பெண் இரு பாலரையும் இயந்திரங்களாக்கி தன் இருத்தலை
மேலும் நீடித்துக்கொள்ள முனைகிறது. வர்க்கப்பகைமையை திசைதிருப்பி சமுகத்தை தங்களுக்குள்
நெடுங்காலமாக உண்டான உள்முரண்பாட்டை தீர்க்க சண்டை இட்டுகொள்ள செய்கிறது.
அரசியல்
பொருளாதார சமத்துவமே ஆண் பெண் சமத்துவத்தை உண்டாக்கும். ஆண் பெண் சமத்துவமே வன்முறையற்ற
குடும்ப அமைப்பை அல்லது அதைவிட மேம்பட்ட நம் கற்பனைக்கு எட்டாத சமூக கட்டமைப்பை உருவாக்கி
வளர்ச்சி அடைந்து மேன்மையடையும் ! முன்னேறிசெல்லும் ! ஆகவே ஆணை போல பெண்ணும் சகலவித
சமூக உற்பத்தியில் ஈடுபட்டாக வேண்டும்.
குடும்பம்
பற்றி மார்க்ஸியத்தின் பார்வை என்னவென்றால்:-
“குடும்பம்
என்பது தொடர்ச்சியாக நான்கு வடிவங்களை கடந்து வந்துள்ளது. இப்பொழுது அது ஐந்தாவது வடிவத்தில்
இருக்கிறது என்று உண்மையை ஒத்துக்கொண்டால், இவ்வடிவம் நிரந்தரமாக இருக்குமா ! என்ற
கேள்வி உடனே எழுகிறது. அதற்கு தரக்கூடிய பதில் இதுதான் ! சென்ற காலத்தில் நடந்ததை போல
சமூதாயம் முன்னேற அதுவும் முன்னேறும் ! சமுதாயம் மாற அதுவும் மாறும் ! குடும்பம் சமுதாய
அமைப்பின் படைப்பு. அதன் பண்பாட்டை அது பிரதிபலிக்கும். நாகரீகம் தொடங்கிய காலத்தில்
இருந்து ஒரு தார மணக் குடும்பம் மிகவும் முன்னேறம் அடைந்திருக்கிறது. நவீன காலத்தில்
அது கணிசமாக மேம்பட்டிருக்கிறது. எனவே, ஆண் பெண் சமத்துவம் முழுமையாக சாதிக்கப் படுகின்றவரை
அது மேலும் மேம்பட முடியும் என்று குறைந்த பட்சமாக கருதி கொள்ளலாம். நெடுந்தூர எதிர்
காலத்தில் ஒரு தார மணக்குடும்பத்தினால் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல்
போனால், அதற்கு பின்னால் வரப்போகின்ற வற்றின் இயல்பை ஆருடம் கூற முடியாது.” –எங்கெல்ஸ்
(குடும்பம், தனி சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்).
-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக