ஈ.வெ.ரா. தமிழனுக்கு வழிகாட்டியா ?!


ஈ.வெ.ரா. தமிழனுக்கு வழிகாட்டியா ?!

 


தமிழர்களில் பெரும்பாலானோர் ஈ.வெ.ரா.வை நமக்கான வழிகாட்டி என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது திராவிடவாதிகள் நம்மிடையே பரப்பி வைத்திருக்கும் ஒரு கருத்தியலாகும். கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், அம்பேத்கர், பிரபாகரன் போன்று ஈ.வெ.ரா.வும் நமக்கு வழிகாட்டி என சிலர் சொல்கிறார்கள்.

 

 

கார்ல் மார்க்சும், ஏங்கெல்சும் சர்வதேச பொதுவுடைமை சித்தாந்தத்தை நிறுவியவர்கள். தனியுடைமை அற்ற சமூகம் படைக்க மனித குலம் பல்வேறு போராட்டங்களின் முடிவில் கண்டடையும் மேம்பட்ட, சுரண்டலற்ற, வர்க்க பேதமற்ற சமுதாயத்தை படைக்க கொள்கை வகுத்தவர்கள். உலகில் எந்த உயிரினத்துக்கும் தன் இனக் குழுவை தானே சுரண்டும் தனி உடைமை வல்லாதிக்க பண்பு இல்லை. அவ்வல்லாதிக்க பண்பு மனித குலத்திடம் மட்டுமே உள்ளது. அது பல்வேறு சமூக மாற்றங்களுக்கிடையே மகத்தான சமூதாயத்தை சென்றடையும் சமூக அறிவியல் கோட்பாட்டை இவ்வுலகிற்கு தந்தமையால் அவர்களை நாம் வழிகாட்டியாய் ஏற்கிறோம்.

 

 

அம்பேத்கர், ஏற்ற தாழ்வுள்ள இந்திய மண்ணில் தீண்டாமையால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், மறு மலர்ச்சியாய் பிறந்தவர். ஒட்டு மொத்த இந்திய சமூகமும் வர்க்க பகைமையால் விளைந்த கொடுமைகளுக்கு முடிவு கட்டும் முன், தீண்டாமைக்கு முடிவு கட்டும் தேவையை நாம் உணரச் செய்தவர். ஆகையால், நாம் தீண்டாமையற்ற தமிழ் சமூகம் படைக்க வழிகாட்டியாய் ஏற்கிறோம்.

 

 

பிரபாகரன், ஈழத்தில் ஒடுக்கப்படும், அடிமைபடுத்தப்படும் நம் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராளி. நம் வீரமுள்ள தமிழ் தேசிய இனத்தின் அடையாளம். இந்திய ஆரியத்தையும், சர்வதேசிய ஆரிய வல்லாண்மையையும் எதிர்த்து சமரசத்திற்கிடமின்றி போராடிய மாபெரும் வீரர்களின் தலைவன். நாம் நம்மை திராவிடம் என ஏமாந்து மயங்கியதால் ஏற்பட்ட தீமையையும் பொருட்படுத்தாமல் போராட்ட வடிவத்தையும், போர் வழிமுறைகளையும் சர்வ தேச மானமுள்ள தமிழ் சமூகத்துக்கு அழித்த மாவீரன். அவரை நாம் நம் இனத்தின் தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்கிறோம்.

 

 

ஈ.வெ.ரா., வடுக கன்னட மேலாதிக்கத்துக்கு பங்கம் ஏற்படா வண்ணம் தான் மேற்க்கொள்ளும் வடுக கன்னட ஆதிக்கத்தை மூடி மறைக்க பிராமணியம் வகுத்த தீண்டாமையை பார்ப்பனீய எதிர்ப்பால் மூடி மறைத்து தமிழர்களை திராவிடத்தின் பாதங்களில் பணிந்து தொண்டு செய்யும் பக்தர்களாகத்தான் வைத்திருந்தார்.

 

 

எதற்கெடுத்தாலும் வைக்கம் போராட்டத்தை சொல்லிக் கொள்கிறார்கள். வைக்கம் போராட்டம் இவரோ இவர் கட்சியோ நடத்தவில்லை. இவர் காங்கிரசில் இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி நடத்திய ஆலய நுழைவு போராட்டத்தில் பங்கெடுத்தவர்களில் இவரும் ஒருவர் ! ஒரு பெருமை ஒன்று நிறுவப் படுகிறதென்றால் அது தன்னால் தான் நடந்தது என்று கூறி அதை அறுவடை செய்யும் அரசியல் சூட்சமம் தெரிந்தவர்கள் திராவிடவாதிகள் !  கேரளாவில் தாழ்த்தப்பட்டோருக்கு ஆலய நுழைவு போராட்டம் நடத்தியவர், தமிழகத்தில் ஏன் நடத்தவில்லை !?

 

 

பரமக்குடி, முதுகளத்தூர், இராமனாதபுரம் போன்ற இடங்களில் எல்லாம் தாழ்த்தப் பட்டவர்களுக்கு அநீதி ஏற்படும் போதெல்லாம் ஆலய பிரவேசம் போன்ற போராட்டங்களை ஈ.வெ.ரா. ஏன் நடத்தவில்லை ? கீழ்வெண்மணியில் ஆண்டைகள், வடுகன்கள் என்பதால் ஆண்டான்களுக்கு ஆதரவாக கருத்து வெளிட்டவர்.

 

 

தமிழ் நாட்டில் நகர்புறங்களில் வாழும் மக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஈ.வெ.ரா.வுக்கு ஆதரவாக வாய் கிழிய பேசலாம். நம் நாடே கிராமங்களில் தான் வாழ்கிறது. இன்னும் இரட்டை குவளை முறை உள்ளது ! தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. கிராமங்கள் அனைத்தும் சாதி இறுக்கம் கொண்டுள்ளது. நகர் புறங்களில் பூனூல் அறுக்கும் மாவீரர்கள் கிராமங்களில் வந்து தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடத்தட்டும் ! நாட்டாண்மை, அம்பலங்களின் தோளில் உள்ள துண்டை பிடுங்கி கிழித்துக் காட்டட்டும் பார்ப்போம் ! சாதி மறுப்பு திருமணங்கள் கிராமங்களில் சாத்தியமில்லை ! அப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் சொந்த மண்ணுக்கு திரும்ப முடியாது ! இவர்களை தமிழ் இனமாக உணர செய்வதின் மூலமே அடுத்தடுத்த தலைமுறைகளையாவது தமிழ் இனத்தின் உண்மை வரலாற்றை போதித்து மாற்ற முயற்சிக்கலாம் !

 

 

அதற்குள் இவர்கள் பெரியார் மண் என்கிறார்கள். தமிழன் மண்ணை வடுக கன்னடனுக்கு சொந்தமாக்கி வைப்பதை பெருமையாக நினைக்கும் கழிசடைகளை என்னவென்று சொல்வது !

 

 

பிராமணியம் ஏற்படுத்திய சாதி அடுக்குகளில் அரசியல் செய்து, ஆட்சி செய்யும் இந்த வடுக கன்னட ஆதிக்க சக்திகள் திராவிடத்தின் பெயரால் தொடர்ந்து மடை மாற்றம் செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்நிலைக்கு காரணமான ஈ.வெ.ரா.வை ஒரு வழிகாட்டியாக ஒருக்காலும் ஏற்க இயலாது.

 

 

தமிழ் தேசிய அமைப்புக்குள் திராவிடவாதிகள் உளவாளியாய் உட்புகுந்து திசை திருப்பும் வேலையை செய்து வருகிறார்களா ! அல்லது தமிழ் தேசிய தலைமையே திராவிடம்தானா ! என்று சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

ஈ.வெ.ரா.வின் திராவிடம் பொதுவுடைமை தத்துவம் அல்ல ! திராவிடத்தை உலகெங்கும் கொண்டு செல்ல இயலாது !

 

 

திராவிடம் தீண்டாமைக்கு எதிரானது அல்ல ! இந்தியம் முழுவதுக்கும் திராவிடத்தை தீண்டாமைக்கு எதிராக கொண்டு செல்ல இயலாது !

 

 

திராவிடம் தமிழியம் அல்ல ! உலகத்தமிழர்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல இயலாது !

 

 

திராவிடம் தமிழகத்தை அதிகாரம் செய்யவும், ஆண்டைகளாகவும், அதிகாரிகளாகவும் வடுக கன்னடர்கள் இருந்து தமிழனை இடித்து பேசிக் கொண்டே அரை நிலப்பிரபுத்துவ பண்பாட்டை பேணிக்கொண்டு முடிந்தவரை எத்தனை காலம் தாக்கு பிடிக்க முடியுமோ, அதுவரை தாக்கு பிடிக்க ஈ.வெ.ரா.வால் உருவாக்கப் பட்ட தமிழன் அல்லாத மேட்டுக்குடி அயளானின் ஆதிக்கத் தத்துவமே திராவிடம். அதன் மூலவர் ஈ.வெ.ரா ! தமிழ் நாட்டில் வந்தேறிகளுக்கு மட்டும் பயன் தரும் மோசடி தத்துவம் ! ஈ.வெ.ரா.வை எவனாவது வழிகாட்டி என்பானாகில் அவன் தமிழின துரோகியே ! தாழ்த்தப் பட்டோருக்கான அரசியலை முன் எடுத்தவர் என்று எவனாவது சொல்வானாகில் அவன் அயோக்கியனே !(ஈ.வெ.ரா., தாழ்த்தப்பட்டோருக்கான அரசியலை முன்னெடுத்தார் என சொல்பவன் அதை பட்டியலிடட்டும். இல்லையென்றால் ஈ.வெ.ராவின் துரோகத்தை நான் பட்டியலிடுவேன்). திராவிடர்களின் பேச்சை கேட்டு, பின்னே செல்பவன் எவனாகிலும் அவன் முட்டாளே !

 

 

ஈ.வெ.ரா. தமிழனுக்கு வழிகாட்டியுமல்ல ! தமிழனின் வழி தோன்றலுமல்ல ! தமிழினத்தை திசை திருப்பிய துரோகி !! 

 

தமிழும், .வெ.ரா.வும் கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2018/07/blog-post_53.html

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக