ஈ.வெ.ரா.வின் சிலை உடைக்கப்பட வேண்டுமா !?

ஈ.வெ.ரா.வின் சிலை உடைக்கப்பட வேண்டுமா !?

 

 

நிச்சயமாக ! ஈ.வெ.ரா.வின் சிலை உடைக்கப்பட வேண்டும். ஆனால் இப்பொழுதல்ல ! வருங்காலத்தில் தமிழர்களின் சந்ததியினர் தான் அதை செய்ய வேண்டும். அதற்குள் இந்துத்துவவாதி துடிப்பதன் நோக்கம் என்ன ! இப்பொழுதே உடைக்க வேண்டுமானால் விவேகானந்தரின் சிலைகளையும் சேர்த்து உடைப்பதாயிருந்தால் சரி !

 

 

திராவிடத்தின் குறியீடு ஈ.வெ.ரா. என்றால், ஆரியத்தின் (இந்துத்துவத்தின்) குறியீடு விவேகானந்தர்.

 

 

தமிழனுக்கு திராவிடமும் வேண்டாம் ! ஆரியமும் வேண்டாம் ! ஏனென்றால் நாங்கள் திராவிடர்களுமல்ல, இந்துக்களுமல்ல !

 

 

தமிழனின் எழுச்சியை திசை திருப்பவே, உலுத்துப் போன திராவிடத்தை, தூசி தட்டி புதுப்பித்து அதன் வழியே ஆரியத்தை காலூன்ற செய்ய பிராமணியம் செய்யும் சூழ்ச்சியே ஈ.வெ.ரா. சிலை உடைப்புப் பற்றிய சர்ச்சை.

 

 

இந்துத்துவ தலைமையில் அதிகம் கோலோச்சுபவர்கள் வடுகர்களும், கன்னடர்களும் தான். அதே போல் திராவிடத்தின் தலைமையை உருவாக்கி வழி நடத்துபவர்களும் வடுக, கன்னடர்கள் தான்.

 

 

ஈ.வெ.ரா. என்னும் பக்தி மார்க்கத்தில் ஏமாந்த இழிச்சாவாயன் தமிழன் தான்.

 

 

எந்தத் தமிழனாவது ஈ.வெ.ரா. சிலைக்காக போராடி, கைதாகி, மண்டையை உடைத்துக் கொண்டு அல்லது உயிர் விடுவானாகில் அவன் வருங்காலத்து தமிழ் சந்ததிகளுக்கு துரோகம் இழைத்தவனாவான்.

 

 

தலைமை ரவுடிக்கும், பேட்டை ரவுடிக்கும் ஒரு சிலையை வைத்து தகறாராம் ! தமிழர்களே பேசாமல் ஓரமாய் உட்கார்ந்து வேடிக்கை பாருங்கள். எந்த வடுகன், கன்னடன் ஈ.வெ.ரா.வுக்காக உயிரை விட போகிறான் என்று பார்ப்போம்.

 

 

தமிழர்களின் உழைப்பும், உயிரும் தமிழ் சமூகத்திற்கு தேவைப்படுகிறது. நம் தேசிய இன சிந்தனையை திசை திருப்ப இவர்கள் ஆடும் நாடகத்தை கவனத்தில் கொள்ளவும்.

 

 

ஒவ்வொரு தமிழனும் இனி பிராமணனைப் போல் சிந்தியுங்கள் ! தேசியம் தானே மேலெழுந்து வரும் ! எத்தனை காலம் தான் நாம் முட்டாளாகவும், அடிமையாகவும் இருப்பது !

 

 

நம் அடையாளத்தை ஆரியத்திடமும், திராவிடத்திடமும் தொலைத்துவிட்டு சரியான அடையாளத்தை தேடி அடைந்து வளர நினைக்கும் வேளையில், திராவிடத்தை புதுப்பித்து, அதன் ஊடே ஆரியமயமாக்கலை நிறுவி விட திட்டமிடுகிறார்கள்.

 

 

திராவிடர்களான கமல் ஹாசன், ரஜினி காந்த் போன்றவர்களை உயர்த்தி அவர்கள் வழியாக தமிழகத்தில் ஆரியத்தை நிருவிட, தமிழனுக்கு தற்போது அவசியம் இருக்க வேண்டியது திராவிட மாயையே !

 

 

இந்துத்துவ வடுக கன்னடர்களும், திராவிட வடுக கன்னடர்களும் ஈ.வெ.ராவின் சிலையை வைத்து அரசியல் செய்வதால், தமிழனுக்கு ஒரு சங்கடமான நிலை என்ன வென்றால், ஒன்று ஈ.வெ.ரா.வை வெறுப்பவன் ஆரியத்தின் பக்கம் நிற்க வேண்டும் (அப்படி நின்று விட்டால் அவனுக்கு இந்துத்துவ முத்திரை) அல்லது திராவிடத்தின் பக்கம் நிற்க வேண்டும் (அப்படி நின்று விட்டால் தமிழ் தேசியத்தை கைவிட வேண்டும் அதாவது இனி தமிழன் அல்ல, திராவிடன் என்பதாகும்).

 

 

ஆக தமிழன் தமிழனாக நிற்கக் கூடாது. இதுவே இவர்களின் திட்டம். இதை எல்லாம் தாண்டி எங்களுக்கு ஒரு கொள்கை உண்டு அதுவே தமிழ் தேசியம் !

 

.வெ.ரா. தமிழனுக்கு வழிகாட்டியா ? கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2018/03/blog-post_17.html

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக