விசித்திர வடுகன் !
கலிங்கப் பட்டி
மாவீரனே ! உன் சிம்ம குரல் கேட்டு அவ்வப்போது மக்கள் வியந்து போனதுண்டு ! எந்த அரசியல்வாதிக்கும்
இல்லாத சாதூர்யம் தங்களுக்கு உண்டு ! இந்தியாவில் மக்கள் சபையில் இருந்து ஐநா சபை வரை
உங்களின் பேச்சு வன்மை எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது ! நிமிர்ந்த உடல் ! கம்பீரமான
இராஜ நடை ! தோளில் கருப்பு சால்வை ! ஒளி வீசும் கண்கள் ! எடுப்பான மூக்கு ! தாமரை இதழ்
போன்ற வாய் ! இலக்கிய சொல் வளமை ! சொல்லின் செல்வர் அல்லவா நீங்கள் ! அப்பப்பா ! உங்கள்
பெயரை வைகோ என்று கேட்டாலே SPY CO என்று தான் கேட்கிறது !
என்னை யாரென்று
உங்களுக்குத் தெரியாது என நீங்கள் கூறும் பொழுதெல்லாம் எங்கள் உள்ளம் நடுங்குகிறது
! உங்கள் காலடி பட்ட இடம் சுடுகாடு ஆகிறதே ! நீங்கள் அரசியலில் ஒருவனை ஆதரித்தால் அவன்
விலாசமின்றி போய்விடுகிறானே ! நீங்கள் ஆதரிக்கும் கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி தனி
பெயர் வைக்கிறீர்கள் ! அத்தோடு அது தரை மட்டம் ஆகிறதே ! எப்படி தலைவா !
தாங்கள் ஈழத்தில்
பிரபாகரனை கண்டு வந்த பின்பு தான், புலிகளுக்கும், ஈழதமிழர்களுக்கும் நெருக்கடி, இந்தியத்தின்
வழியாக சர்வதேசிய அளவில் அதிகரிக்க துவங்கியது ! ஆனால் விடுதலை புலிகளின் அடையாளம்
தாங்கள் தான் என்கிறீர்கள் ! ஈழத்தில் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் உங்களுக்கு தமிழகத்தில்
தமிழ் தேசியம் எட்டிக் காயாய் கசக்கிறதின் காரணம் என்ன !
கடந்த நாடாளுமன்ற
தேர்தலில் தமிழ் நாடு முழுவதும் சென்று மோடிக்கு வாக்களியுங்கள், தமிழ் நாடு வளம் அடையும்
! மேன்மை அடையும் ! என்றீர்கள். எங்கள் புரட்சி தலைவி அம்மா அவர்கள் மோடியா ! லேடியா
! என்று கேட்டார்கள் அதற்காக அம்மாவை இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக விமர்சித்தீர்கள்
! நாங்கள் எல்லோரும் மோடி வேண்டாம் லேடிதான் வேண்டும் என்றோம் ! அதற்காக மோடியின் ஆட்சி
லேடி கட்சியையும் குறுக்கு வழியில் கைப் பற்றி தமிழ் நாட்டு மக்களை பாடாய் படுத்த நீங்கள்
எல்லாம் காரணமானீர்கள்.
மது விலக்கு அரசியலுக்காக
நாளை மரணிக்க இருந்த ஒரு பெரிய மனிதனை செல் போன் டவர் மீது ஏற்றி இன்றே போய்விடு என்று
உயரே தூக்கிவிட்டீர்கள். மது விலக்கு வேண்டு மென்று மது அருந்திவிட்டு வந்து மது கடைகளை
உம் தொண்டர்களை கொண்டு சூறையாடினீர்கள்.
சட்டசபை தேர்தலில்
மக்கள் நலக் கூட்டணி என ஒன்றை அமைத்தீர்கள் அது மண்ணாங்கட்டியாய் போனது ! விசயகாந்துக்கு
மஞ்சள் துண்டு போர்த்தி, மஞ்சள் தண்ணி தெளித்து அவர்களின் வெற்றிக் கனவை வெட்டி வீழ்த்தினீர்கள்
! கம்யூனிஸ்ட்டுகள் உங்களோடு சேர்ந்ததால் மார்க்ஸ் அதை சொன்னார், இலெனின் இதை சொன்னார்
என்றெல்லாம் பேசுவதை விட்டுவிட்டு பெரியார் புராணம் பாடுகிற அளவுக்கு மாற்றி விட்டீர்கள்
! ஏனென்றால் அவர்களின் கட்சியின் தலைமையும் ஆரியமும், திராவிடமும் அல்லவா ! அவர்களிடமும்
தமிழன் தலைமை கிடையாது ! ஓரிருவர் இருந்தாலும், தமிழன் சொல் சபை ஏறாது ! திருமாவளவன்
பற்றி சொல்ல வேண்டியதில்லை இராமன் ஆண்டால் என்ன ! இராவணன் ஆண்டால் என்ன ! நம் வழி தனி
வழி ! தலித் அரசியல் ! அதில் தலைவனாக தொடர்ந்து வளம் வர முடிகிறது ! அது போதும் ! நாளை
ரஜினி, கமல் என்று எவன் வந்தால் என்ன !
இப்படியாக ஒருக்
கூட்டணியால் சிறுசிறு கட்சிகளையெல்லாம் சட்ட சபையில் காணாமல் ஆக்கினீர்கள் ! இன்று
ஈ.வெ.ரா. சிலையை வைத்து அரசியல் செய்து தமிழ் நாட்டை அதிர வைக்கிறீர்கள் ! ஏமாந்த தமிழர்கள்
எல்லாம் உங்களுடன் இருக்கிறோம் ! என்ற தைரியம் உங்களுக்கு ! மோடியே ! இராணுவத்தை கொண்டு
வந்து சிலையை உடைத்துப் பார், உடைப்பவன் கை,கால்கள் வெட்டப் படும் என்கிறீர்கள் ! இப்படியே
எங்களை உசுப்பேற்றி, உசுப்பேற்றி திறமையாகத் தான் அரசியல் செய்கிறீர்கள் ! நீங்கள்
சொல்லுவதை போல் இராணுவத்தை வைத்து ஈ.வெ.ரா. சிலை உடைக்கப் பட்டால் நிச்சயம் பத்துப்
பேராவது துப்பாக்கி குண்டுக்கு மாண்டு போவார்கள் ! ஒரு பத்துப் பேர் தீக்குளிப்பார்கள்
! இறந்தவன் பட்டியலை பார்த்தால் கருப்பச்சாமி, மாயாண்டி, தமிழ்ச் செல்வன், முனியாண்டி
என தமிழனாய் மாண்டு போய் இருப்பார்கள் ! தாலியறுத்த தமிழச்சியின் அழுகுரல் விண்ணை முட்டும்
! அதில் ஈ.வெ.ரா.வுக்காக ஒரு வடுகனோ, கன்னடனோ உயிர் விட்டிருக்க மாட்டான் !
மோடிக்கு ஓட்டு
கேட்ட நீங்கள் இன்று மோடிக்கே சவால் விடுகிறீர்கள் ! தமிழனுக்கு ஞாபக மறதி அதிகம் என்பதால்
இவ்வாறு பேசுகிறீர்கள் என நினைக்கிறேன் ! நாளை தேர்தல் வந்தால் கூட மோடிக்கு ஓட்டு
கேட்ப்பீர்கள் ! இந்த இலட்சணத்தில் ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என்கிறீர்கள்
! தாய் கழகத்தின் பாசமோ ! ஒரு வேளை தாய் கழகம் ஏதோ ஒரு திட்டத்தோடுதான் உங்களை தனியாக
உலாவ விட்டிருக்கிறதோ ! எப்படியோ, ஒற்றன் ஒட்டு கேட்க்கலாம் ! ஆனால் ஓட்டு கேட்க கூடாது
! தமிழக மக்கள் வைக்கோவை கண்டால் ஓட்டளிக்க மாட்டார்கள் !
ஸ்டாலின் ஓட்டு
கேட்க வைகோவை அனுப்பினால் ஆர்.கே.நகர் கதிதான் ! வைகோவை ஓரம் கட்டினால் எதிர் கட்சியாக
அமரும் வாய்ப்பாவது கிட்டும் !
முன்பெல்லாம் சீமானை
சட்டை செய்யாத வைகோ ஈ.வெ.ரா.வின் சிலை பற்றிய சர்ச்சைக்கு பிறகு, தன்னுடன் சீமானையும்
சேர்த்துக் கொள்கிறார் ! சீமானும் பெரியாரை எதிர்த்து நான் கட்சி கட்டவில்லை என்கிறார்
! எப்படி என்றால், திராவிடத்தை எதிர்த்து அதற்கு மாற்றாக நான் கட்சி கட்டவில்லை என்பதை
மாற்றி சொல்கிறார் ! பிறகு எதற்கு தமிழனுக்கு தனி கட்சி ! நாம் தமிழர் (திராவிடர்)
கட்சிதானே ! இனி அடைப்புக் குறியை எடுத்துவிட வேண்டியதுதான் ! சுப வீ போல சீமானும்
இருந்து விட்டு போகட்டும் ! இனி நாம் தமிழர், நாம் தமிழர் திராவிடர் கட்சியாய் இருக்கட்டும்
!
“தமிழ் தேசியம்
இம்மண்ணில் நிறுவப்படும் நிலை ஏற்பட்டால் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட கூட்டணி
வைக்கத் தயங்கக் கூடாது ! தமிழ் தேசியத்தை வீழ்த்திய பிறகு பிரிந்து நின்று கொள்ளலாம்
!” என பேசியவர் தானே நீங்கள் (வைகோ) !
திராவிடத்தையும்,
அதன் பங்காளியான ஆரியத்தையும் காக்க தமிழ் தாயை என்றென்றும் அடிமையாய் வைத்து வளம்
கொழிக்க பல்வேறு வில்லங்க வேளைகளையும் விசித்திரங்களையும் கைகொண்ட வடுகனாகிய தங்களை
“விசித்திர வடுகன்” என்று பொருள் கொள்வதில் தவறில்லை அன்றோ !
-தமிழர் வரலாற்று
கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக