ஈ.வெ.ரா.வை போற்றுவது தீமையே !
“
நீ (தமிழன்) வாழ்த்துவதால் தமிழ் தாய்க்கு ஒரு கொம்பு முலைத்துவிடுமா ? கடவுள் வாழ்த்து
வேண்டாம் என்றால், உடனே, தமிழ் தாய் வாழ்த்து. ஒரு முட்டாள்தனத்துக்கு பதில் இன்னொரு
முட்டாள்தனமா ? “ - ஈ.வெ.ரா.- (விடுதலை தேதி
13/04/1972)
ஆரியர்கள்
(தேசியக் கட்சிகள்) இந்துத்துவம், மற்றும் அரசியல் அதிகார மேலாண்மையின் நிமித்தம் தமிழ்த்தாய்
வாழ்த்தை அவமதிக்கிறார்கள். இந்த திராவிடத்தலைவன், திராவிடத்தின் குறியீடு, திராவிட
கொள்கையின் மூலவர், நாத்திம் என்ற போலிதனத்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கிறார்.
ஆரியமும்
திராவிடமும் தமிழுக்கு எதிராக ஒரே பக்கம் அணி சேர்வதை பார்க்க முடிகிறதல்லவா !
இங்குள்ள
பெரியாரின் திராவிட வாரிசுகள் ஆரிய திராவிட போர் என அடிக்கடி சொல்லி வருவதும், தமிழ்த்தாய்க்கு
அதிக மதிப்பளிப்பது போல் நடிப்பதும் தமிழர்களாகிய நம்மை ஏமாற்றத்தான் என்பது தமிழர்களே
உங்களுக்கு புரியவில்லையா !
இந்த
ஆரிய திராவிட போர் தமிழர்களுக்கானதல்ல ! நம்மைக் காட்டி நம்மை தூண்டி வடுக கன்னடர்
நலம், இலாபம் பெறுவதே இவர்களின் நோக்கம்.
வடுக
கன்னடர்களின் அதிகார வாழ்வியல் பழுதின்றி நடை பெற, அதற்கு தமிழன் துதி பாடி, போற்றி
புகழ்ந்து அடிமையாய் வாழ்ந்திட உருவானதே திராவிட கொள்கை !
விஜயநகர
பேரரசில் அதிகாரம் பெற்ற இவர்கள், அதன் வீழ்ச்சிக்கு பிறகு, அதிகாரத்திற்கு பங்கமேற்படா
வண்ணம், மொகலாயர் ஆட்சி, அதன் பின் ஆங்கிலேயர் ஆட்சி என அனைத்து ஆட்சிகளிலும் மேல்
அதிகார அரசுகளிடம் அனுசரித்து அவர்களுக்கு கீழ் படிந்து, காட்டிக் கொடுத்து, கப்பம்
கட்டி தமிழர்களின் மீதான அவர்களின் அதிகாரத்தை பழுதின்றி செய்து வந்தார்கள். வெள்ளையனிடமிருந்து
எப்படியேனும் தனி திராவிட நாடு வாங்கி மன்னர்களாக வலம் வர துடித்து, இவர்களின் வாயில்
வெள்ளையன் மண்ணை அள்ளி போட்டு விட்டு, இந்திய ஆரியத்திடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான்.
ஆரியம்
தமிழர்கள் மீது நடத்தும் அரசியல், பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிராக உக்கிரமாக, தன்
எழுச்சியாக தமிழர்கள் போராடி உயிரிழக்கும் போதெல்லாம், அதை ஆரிய திராவிட போரென கூறி
அரசியல் அறுவடை செய்து மேன்மையாய் வாழ்ந்து வருகிறார்கள்.
நம்
மூவேந்தர்களும் கண்மூடித்தனமான இறை பக்தியால், பிராமணியத்தை நம்பி, அதிகாரம் இருந்தும்
தமிழனுக்கான மதத்தை தோற்று விக்காது நம் கடவுள்களை எல்லாம் பறிகொடுத்தார்கள். பிராமணன்
கொண்டு வந்த வழிபாட்டு முறையை ஏற்றதால் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் அடிமை நிலைக்குத்
தள்ளப் பட்டோம். இன்று வரை தன்னை இந்து என்றும், இந்தியன் என்றும், திராவிடன் என்றும்
உணர்வதால் நம் எல்லைகளை இழந்தோம், உரிமைகளை இழந்தோம், நம் பண்பாட்டு வாழ்வியலையும்,
நம் மொழியையும் இழந்து வருகிறோம்.
காமராசர்
காலத்தில் மொழிவழி மாகாண பிரிவினையால் நம் சொந்த எல்லைகளை இழந்தோம். நம் மொழி மீதான
தாக்குதலாக இந்தி திணிப்பை எதிர்கொண்டோம். இந்தி மொழியை திணித்ததற்க்காகவே 1967 ல்
காமராசரின் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
ஆனால்
நம் ஈ.வெ.ரா. என்ன சொன்னார் தெரியுமா ? காமராசர் ஆட்சி அவசியமா, இந்தி ஒழிய வேண்டுவது
அவசியமா என்று என்னை யாராவது கேட்டால், காமராசர் ஆட்சி தான் அவசியம் என பலமாக சொல்லுவேன்
என்றார்.
காமராசர்
ஆட்சி அவசியமா இல்லையா ! இந்தி மொழி தேவையா, தேவையில்லையா ! என்று தனித்தனியே விவாதிக்க
வேண்டிய இரண்டையும் ஒன்றாய் இணைத்து நம் மீடியாக்கள் குழப்பமான தலைப்பில் விவாத அரங்கங்கள்
நடத்துவது போல் குழப்பமான கேள்விக் கேட்டு அதற்கு பதில் உரைக்கிறார்.
ஈ.வெ.ரா.வும்
இந்தியை எதிர்கிறார் அது தமிழ் மொழி பற்றால் அல்ல ! ஆரியத்தை
எதிர்க்க இந்தி எதிர்ப்பை கருவியாக்கிக் கொண்டார். அத்துடன் தமிழ் இலக்கண நூல்களையும்,
இலக்கியங்களையும் கேவலமாக பேசுகிறார். தமிழனின் மூல இலக்கணமான தொல்க்காப்பியத்தையும்,
வாழ்வியல் இலக்கியமான சிலப்பதிகாரத்தையும் வன்மையாய் சாடுகிறார். ஈ.வெ.ரா. காலத்தில்
வாழ்ந்த தமிழர்களில் முட்டாள்கள் பல பேர் போற்றி வந்தார்கள் என்பதற்காக நாமும் போற்ற
இயலாது.
தமிழுக்காக,
தமிழனுக்காக வாழ்ந்த நம் தமிழ் பெரியோர்கள் வரிசையில் வைத்து மதிப்பளிக்கவும் இயலாது.
ஈ.வெ.ரா. வடுக கன்னட மேட்டுக்குடி மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டே அரசியல் செய்தவர்.
தமிழனுக்கு
ஒரு பேருதவி செய்துவிட்டு, பத்து பெரும் தீமைகளை செய்தாலும், அந்த ஒரு நன்மையின் நிமித்தம்,
அந்த பத்து தீமைகளை தமிழன் மன்னித்து விடுகிறான் என்ற பலவீனத்தில் உயிர் வாழ்வது தான்
திராவிடம் !
இதை
அறியாது சூரியன் உதிப்பதும், மறைவதும் ஈ.வெ.ரா.வால் தான் ! நாம் உண்பதும், உறங்குவதும்
ஈ.வெ.ரா.வால் தான் ! பேசுவதும் சிரிப்பதும், சிந்திப்பதும் ஈ.வெ.ரா.வால் தான் ! எழுதுவதும்
எண்ணுவதும் ஈ.வெ.ரா.வால் தான் ! நம் உடம்பில் இதயம் செயல்படுவதும் மூளை இயங்குவதும்,
மலம் கழிப்பதும், சிறுநீர் கல்லடைப்பின்றி பிரிவதும் ஈ.வெ.ரா.வால் தான் ! என்றெல்லாம்
உளறுகிறார்கள் மாக்கியான்கள் (அறிவிளிகள்).
ஈ.வெ.ரா.வின்
முகத்திரையை கிழித்தால் எகிறி வருபவர்கள் ஈ.வெ.ரா. போதித்த பண்பாட்டு சீரழிவால் சிதைந்து
போய் அதிலேயே சுகங்கண்டவர்கள் அல்லது அதிலிருந்து மீள
முடியாதவர்களாக இருக்கக்கூடும் அல்லது ஈ.வெ.ரா.வை கடவுள் மற்றும் புனிதர்கள் தகுதிக்கு
உயர்த்தி கற்பனை செய்து கொண்டவர்களாக இருக்கக் கூடும். இவர்கள் தான் ஈ.வெ.ரா. என்றவுடன்
குதித்தெழுந்து வருவார்கள்.
ஈ.வெ.ரா.
தமிழர்களால் போற்றுதலுக்குறியவரும் அல்ல ! மதிப்பளிக்க தகுதி உள்ளவரும் அல்ல ! ஆரியமும்
திராவிடமும் ஒன்றே ! திராவிடம் வேண்டாம் என்றால் ஈ.வெ.ரா.வும் வேண்டாம். ஈ.வெ.ரா. இன்றி
திராவிட கொள்கையில்லை ! திராவிடம் வேண்டாம் ஆனால் ஈ.வெ.ரா. என் பாட்டன் என்று எவனாகிலும்
சொல்வானாகில் அவன் பித்தலாட்டக் காரனே ! அல்லது பைத்தியக் காரனே !
ஈ.வெ.ரா.வின் சிலை உடைக்கப்பட வேண்டுமா ? என்ற கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் ! http://historicalorganisationoftamils.blogspot.com/2018/03/blog-post_7.html
-தமிழர்
வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக