இந்து, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காதலை எதிர்ப்பது ஏன் ?!


இந்து, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காதலை எதிர்ப்பது ஏன் ?!

 


ஏக போகம் சந்தையாக்கி வைத்திருக்கும் பல்வேறு கருத்தியலில் காதலர் தினத்தை தவிர வேறு எந்த கருத்தியலையும் இந்த இரு கூட்டமும் எதிர்ப்பதில்லை. இந்துத்துவத்தை பொருத்தவரை, காதலை ஊக்கப்படுத்துவது, அதன் வர்ணாசிரமத்திற்கு எதிரானது. அது உருவாக்கி வைத்திருக்கும் சாதிய அடுக்குகளை தகர்த்து விடுகிறது. அனைத்து சாதிகளுக்குள்ளும் முறையற்ற கள்ள உறவு வைத்துக் கொண்டு இச்சை தீர்த்துக் கொள்வதால், அதன் சாதியமயப்படுத்தி வைத்திருக்கும் நிறுவன அமைப்புக்கு பாதிப்பு இல்லை. ஆனால், காதலால் சாதி சமயமற்ற பண்பு உருவாகி வருவது, வருங்காலத்தில் இந்துத்துவ பண்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது.

 

 

ஏற்கனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தேறும் காதல் திருமணங்களில் சாதி சமயங்கள் வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் அவ்விருவரில் ஒரு சாதியோ சமயமோ அவர்களை உள்வாங்கி உமிழ்ந்து விடுகிறது. இருப்பினும் அதை அடுத்த தலைமுறைக்கு, சாதி சமயம் சார்ந்த கருத்தியலில் இறுக்கம் தளர்த்தப்பட்ட சமூகமாக முன்னேறுகிறது. அது தன் மீது திணிக்கப்பட்ட சாதி சமய இறுக்கங்கொண்ட பண்பாட்டை தன் வாரிசுகளுக்கு தளர்த்துகிறது. சாதி சமயமற்ற வாழ்வியலை ஊக்குவிக்கிறது. சமூக முன்னேற்றம் பிராமணியத்தின் தலைமையை கேள்விக்குள்ளாக்குகிறது.

 

 

சாதி சமயமற்ற மண வாழ்க்கை அல்லது ஆண் பெண் இணை வாழ்க்கை மதக் கட்டுமானத்தை வீழ்த்தி முன்னேற காதல் ஒரு ஊடகமாக இருப்பதால் இந்துத்துவம் காதலை எதிர்க்கிறது.

 

 

அடுத்து, இஸ்லாமிய மதம் காதலை வழிந்து எதிர்ப்பதன் காரணத்தை பார்ப்போம்.

 

 

“மனைவிப் பண்ணை” வைத்துக்கொள்ள நூறு சதவீதம் குரான் மற்றும் ஹதீஸ் வழியாக அனுமதி அளித்துள்ள ஒரு மதம். யுத்த காலத்தில் விதவையாக்கப் பட்ட கணக்கற்ற பெண்களை நபி தேவைக்குப் போக மீதி உள்ள விதவை பெண்களை தன் விருப்பம் போல் பகிர்ந்து, நுகர்ந்த பண்பாட்டை கொண்டவர்கள் வகுத்தளித்த மதம்.

 

 

மிக பின் தங்கிய பண்பாட்டை கொண்டவர்களாக இந்த அரபு பிரேதசம் இருந்த காலத்திலேயே இங்கு பெண் வாளேந்தி யுத்த களத்தில் யுத்தம் புரிந்தவளாகவும் அரசியல் பொருளாதார பண்பாட்டை தீர்மானிக்கும் சக்தி பெற்றவளாகவும் அவள் அனுமதி இன்றி எந்த ஆடவரும் தீண்ட முடியாதவளாகவும், சீறிய ஒழுக்கமுள்ளவளாகவும், விளிம்பு நிலை வாழ்வியலை மன்னனிடம் எடுத்து உரையாடி, போராடி உரிமை பெற்றவளாகவும் தைரியமிக்கவளாகவும் வாழ்ந்தவள் தமிழச்சி !

 

 

பிராமண சூழ்ச்சியால் வீழ்ந்து போன தமிழியம், தெரிந்தோ தெரியாமலோ வந்த மதத்தில் ஏதோ இருக்கிறது என இவர்கள் சர்க்கரை என காகிதத்தில் எழுதிவைத்து நக்க வைப்பார்கள் என தெரியாமல் தமிழர்களில் சிலர் இஸ்லாத்தை ஏற்றதால் வந்த வினை ! யானைக்கு பயந்து புலியிடம் மாட்டிக் கொண்டான் தமிழ் முஸ்லிம் !

 

 

இவர்களின் பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்துக் கேட்டால் உங்கள் மதத்தில் என்ன வாழ்கிறது ? உங்களை விட நாங்கள் தான் பெண்ணை அதிகம் மதிக்கிறோம், உரிமை கொடுத்திருக்கிறோம் எனக் கூறி தமிழர்களை இந்துக்களாக்கி விடுகிறார்கள். தமிழனுக்கென்று ஒரு மதம் இல்லாததால் வந்த வினை !

 

 

இஸ்லாத்தை பொருத்தவரை காதலை ஊக்கப் படுத்துவது அதன் இருத்தலுக்கு எதிரானது. பெண் என்பவள் ஆணின் உடல் பசிக்கான பண்டப் பொருளே. இஸ்லாமியச் சட்டப் படி பொண்டாட்டி பண்ணை வைத்து பராமரிக்க இவர்களுக்கு முழு உரிமை உண்டு. நான்கு மனைவி வைத்திருப்பவன் நான்கு பேரையும் காதல் செய்வானா ?! செய்ய முடியுமா ! காமம் தலைக்கு ஏறும் போது எந்த மனைவி மீது மோகம் கொள்கிறானோ அவளுடன் கலவி புரிவான். மீதி உள்ள பெண்கள் இவன்னெப்ப கூப்பிடுவான் என காத்து கிடக்க வேண்டியதுதான் ! அட ! மீதி உள்ள பெண்களில் யாருக்கேனும் காமம் தலைக்கேறி நம்ம ஆளு நம்மில் ஒருத்தியை கூட்டிச் சென்றுவிட்டான் நாம வேற ஒருத்தனை வெளியில் சொல்லாமல் தேடிக் கொள்வோம் என செயலில் இறங்கி பிடிபட்டால் பொது அரங்கில் வைத்து நூறு கசையடி ! இது தானே ஷரியத் !

 

 

இவர்கள் இஷ்டத்துக்கு ஹதிஸ் எழுதி வைத்திருக்கிறார்கள் கணவன் ஒரு மனைவி மீது ஆசைப்பட்டு, கூப்பிட்டால் அவள் மறுக்காமல் சென்று அவனை சந்தோசப் படுத்த வேண்டும். அதை அவள் மறுப்பாளானால் மலக்குகள் (அதாவது தேவ தூதர்கள்) வந்து, இரவு முழுவதும் அந்த பெண்ணை சபித்துக் கொண்டே இருப்பார்களாம் ! எப்படி இருக்கிறது நியாயம் பார்த்தீர்களா ! சரி………. மனைவி கணவனை அழைத்து அவன் அவளை சந்தோசபடுத்த வரவில்லை என்று வைத்துக்கொள்வோம், அதற்கு அந்த தேவ தூதர்கள் அந்த கணவனை சபிக்க வருவார்களா ? என்றால், நிச்சயமாக இல்லை !  

 

 

ஆணாதிக்க உச்சத்தில் இருக்கும் இந்த காட்டு மிராண்டிகளிடம் காதல் என்னும் மெல்லிசையின் மென்மையை எவ்வாறு எதிர் பார்க்க முடியும்.

 

 

இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதி மற்றும் தீண்டாமையும் அப்படியே இஸ்லாத்தில் இருக்கும் நிலையில், இவர்களாக திட்டமிட்டு உருவாக்கிய புனைவு சாதிக்குள் தமிழ் பேசும் முஸ்லிமை மட்டும் அடைத்து வைத்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் சாதி மற்றும் தீண்டாமைக்கு சர்ச்சார் கமிட்டியின் அறிக்கையே சான்றாகும்.

 

 

அதுமட்டுமல்ல இஸ்லாத்தில் வரதட்சணை கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. இந்து மதத்திலோ அல்லது தமிழர்களிலோ வரதட்சணையின்றி இளம் வயதுல்ல ஆணுக்கு, இளம் வயது பெண்ணை மனம் முடித்து வைத்துவிட முடியும். ஆனால் இவர்களில் அது முடியவே முடியாது. நம் வீட்டில் புறக்கடையில் கோழி பண்ணை வைத்து தேவைப்படும் பொழுது கோழியடித்து சாப்பிடுவதை போல இவர்கள் மதத்தில் வரதச்சணை கொடுமையால் மணமாகாத பெண்கள் காத்துக் கிடந்தால், ஒன்னுக்கு இரண்டோ, இரண்டுக்கு மூனோ அவன் குமரனோ, கிழவனோ கட்டிக் கொண்டு மனைவியாய் வைத்துக் கொள்வார்கள். வரதட்சணை கொடுக்க இயலாமல் தேங்கிய இஸ்லாமியப் பெண்கள் தன் தேவை கருதி வேறு இனத்தை, மதத்தை சேர்ந்தவனை காதலித்து திருமணம் செய்து கொண்டால், அதை விபச்சாரம் எனக் கூறி அப்பெண்ணை சமூகத்தில் இருந்து ஒதுக்கவோ அடிக்கவோ கழுத்தறுக்கவோ அலைவார்கள். போன பிள்ளை கட்டியவனையும் கூட்டிக்கொண்டு மீண்டும் இஸ்லாத்துக்குள் வந்து விட்டால் அல்லாஹூ அக்பர் என்பார்கள் !

 

 

இவர்களுக்கு பெண்கள், உடல் பசிக்கு புணரும் பண்டங்கள் தான் ! காதல் பற்றி எப்படி புரியும் ! ஆக இந்துவும் இஸ்லாமும் எப்பொழுதுமே காதலுக்கு எதிரிகள் தான் ! மாறுபட்டு வரும் காலத்திய புதிய தலைமுறைகளே ! இந்த பிற்போக்கு, மதவாத சக்திகளை முறியடிக்கும் !

 

 

“ ஒரு புதிய தலைமுறை வளர்ச்சி அடைந்த பிறகு, அந்த தலைமுறையை சேர்ந்த ஆண்களுக்கு பணத்தைக் கொண்டு அல்லது சமூக ரீதியான இதர அதிகார சாதனங்களைக் கொண்டு, ஒரு பெண்ணை இணங்கச் செய்யும்படி தம் வாழ்க்கையில் என்றைக்குமே நேராது. பெண்கள் உண்மைக் காதலுக்காக மட்டுமன்றி, வேறு எந்த நோக்கத்துக்காகவும், எந்த ஆணுக்கும் என்றைகுமே இணங்க மாட்டார்கள்” – பி.ஏங்கல்ஸ் –

 

 

அந்த புதிய தலைமுறையை சென்றடைய ஆண், பெண் இருவரிடையேயான காதல் வாழ்வை வளர்த்தெடுப்போம் ! வாழ்க காதல் !

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமில்லா தமிழ் தேசிய பார்வை)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக