எது வேத மொழி !


எது வேத மொழி !

 



கிமு 1500 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவின் வட மேற்கில் இருந்து தென் கிழக்கு நோக்கி வந்து சிந்து வழியாக நாவலந்தீவுக்குள் (இந்தியா) நுழைந்து சிந்துவில் வாழ்ந்த தமிழர் நாகரீகத்தை அழித்து ஆரியம் அதிகாரத்தை நிறுவியது. கிரேக்கத்திற்கு மிக நெருங்கிய ஒரு மொழியை பேசிக்கொண்டு எழுத்தறிவின்றி அநாகரீக கூட்டமாக இருந்தனர் இவர்கள் மேய்ச்சல் நிலம் தேடி வந்த சிறுக்கூட்டத்தாராய் இருந்ததால், வட இந்திய தமிழர் பேரினமான பழங்குடி மக்களோடு கலந்து பிராகிரதம் என்னும் வட மொழியை பேசினர். அந்த ஆரியக் கூட்டத்தில் ஒரு பிரிவினர் மக்களின் பேதைமையையும் கடவுள் பித்து மற்றும் தாராள மனம் இவற்றை பயன்படுத்தி உயர் வாழ்வு பெற்றனர் தாங்கள் பேசி வந்த முன்னோர் மொழியை வேத மொழி யென்றனர் அனைத்து அரசியல் அதிகாரத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக தன்னுடைய தலைமையை தக்க வைத்துக் கொண்டனர். தன் தலைமையை ஏற்றுக்கொள்ளாதவரை, ஏற்றுக் கொண்டவரை வைத்தே போரிட்டும், சூழ்ச்சி செய்தும் அடக்கினர்.

 

 

இந்திய ஆரியம் வேள்விகள் மூலம் இறை வணக்கத்தை செய்து வந்தனர். தமிழர்களுக்கு எதிராக வேதங்களை படைத்தனர். வேத காலத்தில் இந்த ஆரிய பூசாரிகள் தென் நாடு வந்து தமிழரின் நாகரிகத்தை கண்டு வியந்தனர். வடவேங்கடத்தை தாண்டி போரிட்டு மூவேந்தர்களை வீழ்த்த முடியாது என உணர்ந்தனர். இந்த ஆரிய பூசாரிகள் ஆரம்பத்தில் தமிழகத்தில் மதிப்பற்று சேரிகளில் வாழ்ந்தனர் பின் இங்குள்ள மன்னர்களிடமும் வேந்தர்களிடமும் வேள்வி முறை வழிப்பாட்டையும் உட் புகுத்தி, வெள்ளை தோல் பெண்டிரைக் கொண்டும் உயர் அதிகாரத்தை கைப்பற்றி, இங்குள்ள ஆன்மீக இறையியல் கோட்பாடுகளை தனதாக்கிக் கொண்டு தனக்கென தனி இலக்கியங்கள் இருந்தாலன்றி தமிழர்களை அடிமைக் கொள்ள முடியாது என உணர்ந்தனர். அதற்கேற்ற சொல்வளம் அற்ற வேத மொழியுடன் தமிழ் சொற்க்களை கடன் கொண்டும், அவற்றுடன் நூற்றுக் கணக்கான சொற்க்களை திரித்துக் கொண்டும் ஒரு பகுதி பிராகிருதத்தை கலந்தும் புதிதாய் சில வற்றை புனைந்தும் சமஸ்கிருதம் என்ற ஒரு மொழியை உருவாக்கி அதை இறை மொழியாக்கினர். ஆயிரக்கணக்கான முதல் இரு கழக நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன, மறைக்கப்பட்டன, ஒழிக்கப்பட்டன. தமிழல் சமஸ்கிருத சொற்க்களையும் எழுத்துகளையும் புனைந்து சமஸ்கிருதமே மூத்த மொழியெனவும் மூல மொழியெனவும் கூறி வரலாயினர். தமிழ் கடவுளர்களை அவர்களின் கட்டுப் பாட்டில் கருவரை என்னும் சிறைக்குள்ளே தள்ளினர்.

 

 

நாடு தமிழர் நாடு, மக்கள் தமிழ் மக்கள், கடவுள் தமிழனின் தலைவர்களும் கடவுளர்களும், கோவில் தமிழன் கட்டியவை, கோவில் கட்ட பயன் படுத்திய பொருள் தமிழன் தந்தவை, உழைப்பு தமிழனின் உழைப்பு, மக்கள் மொழி தமிழ் மொழி, ஆனால் பிராமணன் தமிழ் வழிப்பாட்டை தடுத்துக்கொண்டிருக்கிறான்.

 

 

எந்த நாட்டிலும் எக்காலத்திலும் வழிப்பாட்டிற்கு ஏற்ற மொழி தாய் மொழியே !  தன் உள்ளத்தில் உள்ளவற்றை தன் தாய் மொழியிலேயே உணர்வு பூர்வமாக உணர்த்த முடியும். இறை வழிப்பாட்டு மொழி என்று ஒரு மொழியும் இல்லை. அப்படி ஒரு மொழி இருக்குமாயின், அது உலகில் தோன்றிய முதல் மொழியாகிய குமரியின்னின்று பரிணமித்த தமிழ் மொழி மட்டும் தான் இருக்க முடியும் ! மனுவின் வேதத்தில் சூத்திரன் வேதம் படித்தால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என சட்டம் படைத்த பிராமணியம் தற்ப்பொழுது சமஸ்கிருதத்திற்கு தமிழ் அகராதி வெளியிடுவதன் நோக்கம் என்ன? தமிழனின் இறைவன் முன் பூசாரித்தனம் செய்ய சமஸ்கிருதம் ஏன் படிக்க வேண்டும் !? எல்லோரும் சமஸ்கிருதம் படித்து என்ன ஆகப் போகிறது. இதன் மூலம் இந்தியையும் சேர்த்து கொண்டு வருவது தானே இவர்களின் நோக்கம்.

 

 

இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் தமிழர்களே பரவி வாழ்ந்தார்கள் என்று மெய்ப்பிக்கப் பட்டு விட்ட நிலையில் இந்தியாவில் அனைவரும் தமிழ் படிக்கலாமே ! தமிழை ஆட்சி மொழியாக்கலாமே !

 

 

தமிழ் படித்தாலாவது உலகில் ஐந்தாறு நாடுகளில் சமூக உறவு கொண்டு வாழ முடியும் அந்நாடுகளில் எல்லாம் தமிழ், அரசின் அலுவல் மொழியாகவும் உள்ளது. ஆங்கிலம் படித்தால் உலகம் முழுவதும் சென்று பிழைக்க முடியும்.

 

 

உலகம் முழுவதும் பறந்து, பறந்து போய் நாட்டை விலைப் பேசி விற்று விட்டு, இந்த பிராமணியம் இங்கு வந்து நாட்டில் எல்லோரும் இந்தி படியுங்கள் என்பதும் சுதேசி பேசுவதையும் கொள்கையாக கொண்டுள்ளது. வட கொரியா சுதேசி பேசினால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது இந்த பிராமண பன்னாடைகள் சுதேசி பேசி என்னவாக போகிறது.

 

 

யூதனுக்கும், தமிழனுக்கும் சில ஒற்றுமையும் வேற்றுமையும் உண்டு. யூதர்கள் உலகில் தனக்கென்று சொந்த நாடின்றி வாழ்ந்தனர் தமிழனும் தனக்கென்று சொந்த நாடின்றி வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். யூதர்கள் உலகின் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகும் போது உலகத்தின் மீது வல்லாதிக்க குணம் வளர்ந்து மேலோங்கியது ஆனால் பூர்வீக பூமியில் வாழும் தமிழனுக்கு அடி விழ, விழ அடிமை புத்தியே வளர்ந்து விட்டது. அதற்குக் காரணம் கடவுள் பித்தும், இன உணர்வின்மையும், இன முரண்பாடும் (தன் இனப் பகை) காரனமாயிற்று.

 

 

ஒவ்வொருவனுக்கும் அவனவன் தாய் நொழியே வேத மொழியாகும் மாற்றான் மொழி ஒரு போதும் கடவுள் மொழியாகாது. அப்படி எவனாவது எந்த மதத்தை சேர்ந்தவனாவது, சொல்லி நம்மை ஏமாற்றுவானாகில் அவன் பித்தலாட்டக் காரனே ! அவன் முன்மொழியும் மொழியும் பித்தலாட்ட மொழியே, ஆதிக்க வெறி கொண்ட மொழியே ஆகும்.

 

 

தாய் தமிழ் மொழியை வேத மொழியாக்குவோம் !

 

ஆதிக்க மாற்றான் மொழியை விரட்டி அடிப்போம் !

 

தமிழ் நீசமொழியா ? கட்டுரையை படிக்க இதை கிளிக் செய்யவும் http://historicalorganisationoftamils.blogspot.com/2018/02/blog-post_4.html

 

 

-தமிழர் வரலாற்று கழகம் (சமரசமற்ற தமிழ் தேசிய பார்வை).     

 

4 கருத்துகள்:

  1. சங்க தமிழ் நூல்களில் தமிழர்கள் வைதீக வேதங்களையும், வேள்வி செய்வதையும்,அந்தணர் பற்றியும் சொல்கிறது

    தமிழர்களின் இலக்கியங்களான தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம்......, இப்படி எண்ணிலடங்காத நூல்கள் அனைத்திலும் வேத கலாச்சாரம்,பண்பாடு,வழிபாடுகளையே சொல்கிறது என்பதை இங்கே பார்க்கலாம். இந்த இலக்கிய நூல்கள் இல்லாமல் தமிழனின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு இவைகளை நிறுவ முடியுமா....?

    http://worldsanathanadarmam.blogspot.com/2020/01/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  2. தமிழ் நூல்கள் கூறும் சமசுகிருத வேத யாகங்கள் & வேள்விகள் பற்றியது...

    கலித்தொகை கூறும் வேள்விகளும் & யாகங்களும்...

    "கேள்வி அந்தணர் கடவும்
    வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே " - கலித்தொகை - 36

    “வேள்வி செய்யும் அந்தணர் வேள்விக் குண்டத்தில் புகை எழும்புவது போல என் நெஞ்சு பெருமூச்சு விடுகிறது."

    அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
    செந் தீச் செவ்அழல் தொடங்க வந்ததை - கலித்தொகை- 119:12,13

    பொருள்: "அந்தணர் செந்தீ வளர்த்து மாலைக் காலத்தைப் போற்றுகின்றனர்"

    இதில் செய்கிற வேள்வி என்ன ? இதில் சொல்கிற அந்தணன் யார் ? அவர் யாக தீ எதற்கு வளர்த்தான் ? இதில் தமிழன் ஓதிய மந்திரம் என்ன ?

    அதாவது பிராமணர்கள் மந்திரங்கள் ஓத வேள்விகள் செய்வதை சொல்கிறது. இது தமிழர் கலாச்சாரம் என அறியமுடிகிறது.

    பரிபாடல் கூறும் நான்கு வேதங்கள்...

    பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
    நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
    ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
    வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
    கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. - பரிபாடல்-திரட்டு 8:7-12

    விளக்கம்: "பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறா: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம்” என பெருமை கொள்கின்றார்.

    தமிழின் பழமையான தொல்காப்பியத்தில் பரி பாடலின் இலக்கணம் எடுத்தாளப்பட்டு இருக்கு. சங்க இலக்கிய காலத்திற்கும் தெளிவாய் தெரிந்திருகிறது வேதத்தின் ஆதி என்பது தமிழே. தமிழின் மந்திர மொழி சமஸ்கிருதம்.

    பதிலளிநீக்கு
  3. புறநானூறு & அகநானூறு கூறும் அந்தணர் வளர்க்கும் வேள்வி பற்றி …

    புறநானூற்றின் பல பாடல்களில் வேதம் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. முதல் பாடலிலேயே, சிவனை வர்ணிக்கும் புலவர் பெருந்தேவனார்…

    “கறைமிடறுஅணியலும்அணிந்தன்று; அக்கறை
    மறைநவில்அந்தணர் நுவலவும்படுமே”

    “வேதம் உணர்ந்த அந்தணர்கள் சிவனைத் தொழுது ஏத்துவார்கள் “என்கிறார்

    "நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
    சிறுதலை நவ்விப்பெருங்கண் மாப்பிணை,
    அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
    முத்தீ விளக்கிற்றுஞ்சும் பொற்கோட்டு
    இமயமும்,பொதியமும் போன்றே' (புறம்-2 )

    "இமயம், பொதியம் ஆகிய மலை அடுக்கத்தில் அந்தணர் வளர்க்கும் முத்தீ விளக்கொளியில் நவ்வி-மான்கள் உறங்குவது போல அச்சமின்றி உன் மக்கள்-சுற்றம் நிலை கொள்வதாகுக' என்கிறார்

    " நற்பனுவல் நால் வேதத்து
    அருஞ் சீர்த்திப்பெருங் கண்ணுறை
    நெய்ம் மலி ஆவுதிபொங்கப், பன்மாண்
    வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி' (புறம் -15)

    "முழவினை முழக்கிக்கொண்டு உன்னைப் பாடும் பாடினியின் வஞ்சிப் பாடலை விரும்பும் வலிமை மிக்கவனே! நால்வேத சிறப்புமிக்க, குழியில் நெய் ஊற்றி, ஆவி பொங்க வேள்வி செய்து, தூண் நட்டுச் சிறப்பெய்தியவனே'”

    ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்ட முனிவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே வேத நூல்களின் துணிவாகும் எனக் கபிலர், சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனை வாழ்த்துகின்றார்.

    பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை வாழ்த்தும் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர்,

    "பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
    நாஅல் வேத நெறிதிரியினும்
    திரியாச் சுற்றமொடு முழுது சேண்விளங்கி' (புறம்-2)

    "பால் புளித்தாலும், பகல் இருளானாலும் நான்கு வேதங்களின் நெறிமுறை மாறினாலும் திரிபில்லாச் சுற்றத்தாருடன் நீ வாழ்வாயாக' என்கிறார்.

    "பணியியர் அத்தைநின் குடையே; முனிவர்
    முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே
    இறைஞ்சுக, பெருமநின் சென்னி; சிறந்த
    நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே' (புறம்-5)

    "நகர்வலம் வரும் முக்கண்ணரான சிவபெருமான் முன் மட்டுமே உன் குடை தாழ்வு கொள்ளட்டும், நான்மறைகளை ஓதும் முனிவர்கள் முன் மட்டுமே உன் சிரம் தாழ்த்துவாயாக!”

    என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மன்னனை வாழ்த்தும்பொழுது பாடுகிறார் புலவர் காரிகிழார்.

    புறநானூற்றில் உள்ள அவ்வையார் பாடல்:

    “ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
    முத்தீப் புரையக் (போல) காண்தகு இருந்த
    கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
    யான் அறி அளவையோ இவ்வே வானத்து
    வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
    இயங்கும் மாமழை உறையினும்
    உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக நும் நாளே (புறம் 367)

    “சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சோழன் பெருநற்கிள்ளி நடத்திய ராஜசூய யாகத்தில் ஒருங்கே அமர்ந்திருந்ததைக் கண்ட அவ்வைப் பாட்டிக்கு ஒரே அதிசயம், ஆச்சர்யம்!! “
    ((சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கு இருந்தாரை அவ்வையார் பாடியது))

    சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.


    மறவர் மலிந்த………………………….
    கேள்வி மலிந்த வேள்வித்தூணத்து - புறம் 400

    சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதானார் பாடியது

    எருவை நுகர்ச்சி, யூபநெடுந்தூண்
    வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம் - புறநானூறு 224

    பதிலளிநீக்கு
  4. அகநானூற்றுக் குறிப்பு…

    பாடியவர் மருதன் இளநாகனார்
    மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
    முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி
    கயிறுஅரையாத்த காண்தகு வனப்பின்
    அருங்கடி நெடுந்தூண் போல, யாவரும்
    காணலாகா மாண் எழில் ஆகம் - அகநானூறு 220


    சிலப்பதிகாரம் கூறும் வேதம்

    “கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க.....” (அடைக்கலக் காதை)

    “வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்”


    திருக்குறள் கூறும் அந்தணர் & யாகங்கள் ...

    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல் - குறள் (543-செங்கோன்மை)

    “அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.”

    ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
    காவலன் காவான் எனின் - குறள் (560 கொடுங்கோன்மை)

    “நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.

    மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
    பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் (134 ஒழுக்கமுடைமை)

    “பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.”

    “ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு” - குறள் 3:1

    “ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்ட முனிவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே வேத நூல்களின் துணிவாகும்.”

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும். – குறள் 28

    “பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.”

    தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன. ரிக் வேதத்தில் வருணன் மிக முக்கியமான கடவுள். தொல்காப்பிய பொருள் அதிகாரம் (1-5) "வருணன் மேய பெருமணல் உலகமும்" என் கூறுகிறது. தொல்காப்பியர் தனது சூத்திரத்தில் கடலும் கடலைச் சார்ந்த நிலமும் ஆன நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன் என்று சொல்கிறார்.

    அது போல் தான் திருக்குறளும் சொல்கிறது ..

    “சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு’ - குறள் 18)

    “தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
    வானம் வழங்காது எனின்’ - குறள் 19)

    பொருள்: “வானம் வறண்டு மழை இல்லாது போனால், இந்த உலகில் வானோர்க்கு எடுக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள்தோறும் செய்யும் பூஜையும் நடைபெறாது”

    மேலே, வள்ளுவன் கூறும் பூஜை என்ன? விழா (க்கள்) என்ன? இது வருண வழிபாடு, இந்திர வழிபாடு (பூஜை) தான் சொல்கிறார் !

    பதிலளிநீக்கு